செவ்வாய் கிரகத்தில் ஏலியன்கள்? அதிசய பாறையை பார்த்து வியந்த நாசா விஞ்ஞானிகள்! தீவிரமடையும் ஆய்வுகள்
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் முற்றிலும் வேறுபட்ட ஒரு புதிய பாறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு முன்னர் இப்படியொரு பாறையை விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் பார்த்தது கிடையாது. அந்த வகையில் இந்த பாறை பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
செவ்வாய்க் கிரகத்தின் ஜெசெரோ பள்ளத்தில் நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் இந்த பாறையை கண்டுபிடித்திருக்கிறது. ஜெசெரோ பள்ளத்தாக்கில் ஒரு காலத்தில் நீர் ஓடிக்கொண்டிருந்தது. அந்த பகுதியில் உள்ள பாறைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால், இந்த பாறை மட்டும் வித்தியாசமானதாக இருக்கிறது.

சுருக்கமாக சொல்வதெனில் இது ரொம்ப தூரத்திலிருந்து இந்த பகுதிக்கு வந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த பாறை உண்மையில் எங்கு இருந்தது? எங்கிருந்து இங்கு வந்தது? எப்படி வந்தது? செவ்வாய் கிரகத்தில் நீர் இருந்த போது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கொஞ்சம், கொஞ்சமாக அரிக்கப்பட்டு இங்கு வந்து சேர்ந்திருக்கிறதா? அல்லது, நிலநடுக்கம் போன்ற செயல்பாடுகளால் இங்கு வந்ததா? விண்கல் மழை மூலம் வந்ததா? என்பது குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர்.
இந்தப் பாறை எவ்வாறு இங்கு வந்தது என்பதைப் புரிந்துகொள்வது, செவ்வாய் கிரகத்தின் வரலாற்றின் அறியப்படாத அம்சங்களை வெளிப்படுத்தக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். செவ்வாயில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விசித்திரமான பாறையை பெர்சவரன்ஸ் ரோவரில் உள்ள மாஸ்ட்கேம்-இசட் எனப்படும் ஹை ரெசல்யூஷன் கொண்ட ஜூம் கேமராக்கள் முதலில் படமெடுத்தன. இந்த பாறை வரிக்குதிரையை போன்று இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த பாறையை ஆய்வு செய்தவன் மூலம் செவ்வாய் கிரகம் எப்படி இருந்தது? அது எப்படி உருவானது? உள்ளிட்ட கடந்த கால தகவல்களை தெரிந்துக்கொள்ள முடியும். இந்த தகவல்கள் பூமியை முழுமையாக புரிந்துக்கொள்வதற்கும் முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர். ஆனால் இந்த கல் ஏலியன் மூலமாக கூட இந்த பகுதிக்கு வந்திருக்கலாம் என சில யூகித்திருக்கின்றனர். யோசித்து பாருங்கள் 1000க்கும் அதிகமான பாறைகளை ஆய்வு செய்த ரோவருக்கு, இந்த பாறை எப்படி கண்ணில் பட்டது?
இந்த பாறைக்கும், அது இருக்கும் இடத்திற்கும் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாதபடி இருப்பது ஏன்? இந்த பாறைக்குள் என்ன இருக்கிறது? என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். பாறையை முழுமையாக ஆய்வு செய்தால்தால் இதை பற்றிய அனைத்து விஷயங்களும் தெரிய வரும்.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications