டிரம்ப் போட்ட ஆயுத ஒப்பந்தம்.. இதுவா முக்கியம் நமக்கு.. அமெரிக்காவில் இருந்து எதிர்ப்பு குரல்
வாஷிங்டன்: டிரம்ப் போட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் பிரதான அதிபர் வேட்பாளரான பெர்னி சாண்டர்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா உடன் பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டதற்கு பதிலாக பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைழுத்திட்டுள்ளார். இதன்படி 21 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து இந்தியா அமெரிக்காவிடம் நவீன ஹெலிகாப்டர்களை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது.
MH-60 ரோமியோ மற்றும் MH-60 ரோமியோ Seahawk ரக ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு இந்த ஒப்பந்தங்கள் நடந்துள்ளன. கடற்படைக்கு இந்த ஹெலிகாப்டர்கள் அதிக பலனை தரக்கூடியவை ஆகும்.

அதிபர் வேட்பாளர்
இந்நிலையில் அமெரிக்காவின் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர் தான் டிரம்ப். அவர் வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெறும் தேர்தலில் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் பிரதான அதிபர் வேட்பாளராக அமெரிக்காவின செனட் சபை உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் போட்டியிட உள்ளார். இவருக்கும் தான் கடும் போட்டி நிலவுகிறது,.

பருவ நிலை ஒப்பந்தம்
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா உடன் பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டதற்கு பெர்னி சாண்டர்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், "Raytheon, போயிங் மற்றும் லாக்ஹீட் போன்ற 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு பதிலாக, அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். காற்று மாசுபாட்டைக் குறைக்கவும், நல்ல புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வேலைகளை உருவாக்கவும், நமது பூமியை காப்பாற்றவும் நாம் ஒன்றிணைந்து செயல்பட ஒப்பந்தம் போட்டியிடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

டிரம்ப் அறிவிப்பு
அகமதாபாத்தில் அண்மையில் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் உரையாற்றிய டிரம்ப், கடற்படை ஹெலிகாப்டர்கள் உட்பட 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்களை அறிவித்தார். அதன்படி இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

ரஷ்யாவுக்கு பதில்
ஆசியாவில் சீனாவின் வலுவான பொருளாதார மற்றும் இராணுவத்துக்கு போட்டியாக வர முயற்சிக்கும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, அமெரிக்காவுடன் உறவுகளை பலப்படுத்த விரும்பவே டிரம்பின் இந்திய பயணம் உதவும் என்று கருதப்படுகிறது. டிரம்பின் வருகையின் மூலம் இந்தியா தனது இராணுவத்தை நவீனமயமாக்குவதற்காக வழக்கமாக வாங்கும் ரஷ்யாவிடம் இருந்து ஆயுதம் வாங்குவதற்கு பதிலாக அமெரிக்கா பக்கம் திரும்பி உள்ளது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
-
புஷ் போட்ட அதே உத்தரவு.. ராணுவ வீரர்கள் வயதை உயர்த்திய டிரம்ப்! பல லட்சம் பேரை ஈரானில் இறக்க முடிவு? -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
இந்தியாவில் இன்னும் 1 மாதத்திற்கான எல்பிஜிதான் இருக்கு.. அப்போ 1 மாசத்திற்கு பின்? என்ன நடக்கும்? -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா!












Click it and Unblock the Notifications