வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இயற்பியலுக்கான நோபல் பரிசு: பிரான்ஸ், ஆஸ்திரியா, அமெரிக்கா நாடுகளை சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: 2022-ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டின் அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜூன் எப் கினாசர் மற்றும் ஆஸ்திரியாவின் அண்டன் ஸிலிங்கர் ஆகிய 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய 6 துறைகளில் சர்வதேச அளவில் அளப்பறிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இதில் அமைதிக்கான நோபல் பரிசு நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது.

ஒரேயடியாக சரியும் எனர்ஜி! சட்டென தூங்க போகும் சூரியன்! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்! என்ன நடக்கும்? ஒரேயடியாக சரியும் எனர்ஜி! சட்டென தூங்க போகும் சூரியன்! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்! என்ன நடக்கும்?

மருத்துவத்திற்கான நோபல் பரிசு

மருத்துவத்திற்கான நோபல் பரிசு

பிற துறைகளுக்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்படுகிறது. இந்தநிலையில், நடப்பு 2022-ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. முதல் நாளான நேற்று மருத்துவத்துறைக்கு அளிக்கப்பட்டது. இதில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மரபியல் நிபுணரான ஸ்வாண்டே பாபோவுக்கு மருத்துவத்துறையில் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

3 பேருக்கு அறிவிப்பு

3 பேருக்கு அறிவிப்பு

இன்றைய நவீன மனிதர்களின் அழிந்துபோன உறவினராக கருதப்படும் நியாண்டர்டாலின் மரபணுவை வெற்றிகரமாக வரிசைப்படுத்தியதற்காக ஸ்வான்டே பாபோவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் 2-வது நாளான இன்று இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2022-ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரியா

அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரியா

அதன்படி, பிரான்ஸ் நாட்டின் அலைன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜூன் எப் கினாசர் மற்றும் ஆஸ்திரியாவின் அண்டன் ஸிலிங்கர் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. குவாண்டம் தொழில்நுட்பம் பற்றிய ஆய்வுக்காக இவர்கள் 3 பேருக்கும் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கலான போட்டோன் சோதனை, பெல் ஏற்றத்தாழ்வுகளை மீறுதல், குவாண்டம் தகவல் அறிவியல் ஆகிய ஆய்வுகளுக்காக இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுக்கான..

கடந்த ஆண்டுக்கான..

கடந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ஸியுகுரோ மனபில், ஜெர்மனியின் கிளஸ் ஹஸ்சல்மேன் மற்றும் மற்றும் இத்தாலியின் ஜார்ஜியோ பாரிசி ஆகியோருக்கு வழங்கப்பட்டு இருந்தது. பூமியின் காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பான ஆய்வுக்காக இவர்களுக்கு கடந்த ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டு இருந்தது.

English summary
The 2022 Nobel Prize in Physics has been announced for 3 people: France's Alain Aspect, America's June F Kinasser and Austria's Anton Seelinger.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X