ட்ரம்ப் குடும்பத்திற்கு நெருக்கமான வெள்ளை மாளிகை ஊழியருக்கு கொரோனா.. ட்ரம்புக்கு உடனே பரிசோதனை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குடும்ப (வேலட்) தனிப்பட்ட உதவியாளரான வெள்ளை மாளிகை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
Recommended Video
இதையடுத்து உடனடியாக அதிபர் டிரம்ப்புக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அவருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது.
அமெரிக்காவில், கொரோனா வைரசால் சுமார், 75 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் அதிபர் டிரம்ப்பிற்கு கடந்த சில மாதங்களுக்குமுன் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அவருக்கு, பாதிப்பு இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில்தான் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலக ஊழியரும், அதிபர் டிரம்ப் குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்துவரும் வேலட் என்று அழைக்கப்படக்கூடிய, தனிப்பட்ட உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
முதல் 10,000 கொரோனோ கேஸ்களுக்கு ஒன்றரை மாதம்.. லேட்டஸ்ட் 10,000 கேஸ்களுக்கு வெறும் 4 நாள்தான்.. ஷாக்
"வெள்ளை மாளிகை வளாகத்தில் பணிபுரியும் அமெரிக்க ராணுவத்தின் உறுப்பினர் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகக வெள்ளை மாளிகை மருத்துவ பிரிவு சமீபத்தில் எங்களுக்கு தெரிவித்தது" என்று வெள்ளை மாளிகையின் துணைச் செயலாளர் ஹோகன் கிட்லி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். "அதிபரும், துணை அதிபரும் பரிசோதனைக்கு உட்பட்டனர். அவர்களுக்கு, நோய் தாக்கம் இல்லை என தெரியவந்துள்ளது. அவர்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள்." இவ்வாறு அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.