பாகிஸ்தானுக்கு பணத்தைக் கொட்டி அழறோம்.. ஆனால் அவர்கள் எதையும் செய்யவில்லை.. டிரம்ப் ஆத்திரம்
Recommended Video
வாஷிங்டன் : பாகிஸ்தானுக்கு நிதியை கொட்டி அளித்தோம். ஆனால் அவர்களை எங்களுக்கு எதையும் செய்யவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில் , தீவிரவாத தாக்குதலில் இருந்து காத்துக்கொள்ள ஆசிய நாடுகளுக்கு அமெரிக்க நிதியுதவி செய்து வருகிறது.
ஆனால், பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஒசாமா பின் லேடன் போன்ற தேடப்படும் குற்றவாளிகளை மறைத்து வைக்க அதைப் பயன்படுத்தியது.
தீவிரவாதிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பாகிஸ்தானுக்கான 1.3 பில்லியன் டாலர் நிதி உதவியை அமெரிக்க அரசு கொடுக்க மறுத்தது.
அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் பின் லேடன் பாகிஸ்தானில் மிலிட்டரி அகாதெமிக்கு பக்கத்திலேயே இருந்தது அவர்களுக்கு தெரிந்திருந்தும் அந்நாட்டிற்கு ஆண்டுக்கு 1.3 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்கப்பட்டது. ஆனால் அந்த நாடு எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என கூறியுள்ளார்.