அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதலுக்கு துப்பாக்கி, குண்டுகளோடு வந்த கலவரக்காரர்கள்.. விசாரணையில் அம்பலம்
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு லாரி நிறைய, ஆயுதங்களோடு, வன்முறையாளர்கள் இருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அலபாமாவைச் சேர்ந்த நபர் புதன்கிழமை அமெரிக்க கேபிடல் கட்டிடத்தில், 11 நாட்டு வெடிகுண்டுகள், அசால்ட் துப்பாக்கிகள் மற்றும் இரண்டு பிளாக் கைத்துப்பாக்கிகள் வைத்திருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்னொரு நபர் அசால்ட் துப்பாக்கியை, கேபிட்டல் கட்டிடத்தை நோக்கி காட்டியதாகவும், சுடுவேன் அல்லது, சபாநாயகர் நான்சி மீது தாக்குதல் நடத்துவேன் என்று அவர் கூறியதாகவும் விசாரணை அதிகாரிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட சில தனி நபர்கள் கூட தங்களிடம் துப்பாக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து நடைபெறும் விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு வர்ஜீனியாவைச் சேர்ந்த எம்.பி மற்றும் சபாநாயகர் நான்சி பெலோசியின் அலுவலகத்திற்குள் நுழைந்து அவரது மேசையில் அமர்ந்த ஒரு நபர் உட்பட 13 பேர் மீது நீதித்துறை அடையாளம் கண்டு குற்றம்சாட்டியுள்ளது.
கிளீவ்லேண்ட் க்ரோவர் மெரிடித் ஜூனியர் என்ற நபரை மத்திய விசாரணை அதிகாரிகள் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்ததாக குற்றம்சாட்டியுள்ளது. அடுத்த வாரம் நீதிமன்ற விசாரணைக்கு அவர் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
ஆர்கன்சாஸின் ரிச்சர்ட் பார்னெட் என்பவரும் கலவரத்தின் போது, சபாநாயகர் நான்சி பெலோசியின் மேஜையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். அவரை அடையாளம் கண்டு, லிட்டில் ராக் நகரில் நேற்று காலை அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கைதுகள் ஒரு பக்கம் என்றால், நாடாளுமன்ற தாக்குதலை போலீஸ் தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு காவல்துறை மீது திரும்பியுள்ளது. இதையடுத்துதான்
அமெரிக்க கேபிடல் காவல்துறைத் தலைவர் ஸ்டீவன் சுண்ட் ராஜினாமா செய்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கேபிடல் போலீஸ் மற்றும் பிற சட்ட அமலாக்க அதிகாரிகளை, மெட்டல் குழாய்கள் மற்றும் பிற ஆயுதங்களை கொண்டு "தீவிரமாக தாக்கப்பட்டனர்" என்று தெரிவித்துள்ளார். பெரும் சேதத்தை ஏற்படுத்தி கேபிடல் கட்டிடத்திற்குள் நுழைய வன்முறையாளர்கள் தீவிரமாக இருந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications