சர்ச்சுக்கு நடந்து சென்ற டிரம்ப்.. பாதுகாப்பிற்காக போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை வீசிய போலீஸ்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேவாலயத்திற்கு நடந்து செல்லும் போது அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க வெள்ளை மாளிகை அருகே போராட்டம் நடத்தியவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளையும் ரப்பர் தோட்டாக்களையும் போலீஸார் பயன்படுத்தி அவர்களை கலைத்தனர்.
Recommended Video
கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கடந்த 24 ஆம் தேதி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவரது கழுத்தில் முழங்காலால் நெரித்து போலீஸ் அதிகாரி கொலை செய்தார்.
கருப்பினத்தவர்கள் மீது நடத்தப்படும் இந்த படுகொலைகள் அமெரிக்காவில் தொடர்கதையாகி வருகிறது. இதை கண்டித்து அமெரிக்காவே கலவரப்பூமியாக மாறியுள்ளது. பிளாய்டின் கொலைக்கு நியாயம் கேட்டு போராட்டங்கள் வலுத்துள்ளன.

டிரம்ப்
6ஆவது நாளாக வலுத்துள்ள போராட்டம் குறித்து ரோஸ் கார்டனில் டிரம்ப் பேசுகையில் அமெரிக்கா முழுவதும் நடக்கும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வருவேன். ஒரு நகரிலோ அல்லது மாகாணத்திலோ வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றால் அதை ஒடுக்க தேசிய பாதுகாப்பு படையினரை குவிக்க வேண்டியது மேயர்கள் மற்றும் மாகாண ஆளுநர்கள்.

அமெரிக்க படைகள்
அவ்வாறு தேசிய பாதுகாப்பு படைகளை அழைக்க மறுத்தால் பொது மக்களின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து ஏற்படக் கூடாது என்பதற்காக அமெரிக்க ராணுவத்தை குவிப்பேன். அப்போதுதான் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் என தெரிவித்திருந்தார்.

புகை மூட்டம்
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வெள்ளை மாளிகை முன்பு குவிந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த முக்கிய கட்டடத்தின் ஜன்னல்கள் மற்றும் கார்களை தீவைத்து கொளுத்தினர். இதனால் வெள்ளை மாளிகையை சுற்றி புகை மூட்டமாக இருந்தது.

கண்ணீர் புகை
இந்த நிலையில் டிரம்ப் அங்கிருந்த பங்கரில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அவர் வெள்ளை மாளிகை அருகே உள்ள செயிண்ட் ஜான் எபிஸ்கோபல் தேவாலயத்திற்கு நடந்து செல்லவிருந்தார். அப்போது அவரது பாதுகாப்பு கருதி போராட்டக்காரர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டையும் ரப்பர் குண்டுகளையும் வீசினர்.

துப்பாக்கிச் சூடு
இதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்த பிறகு கையில் பைபிளுடன் டிரம்ப் தேவாலயத்திற்கு நடந்து சென்றார். போராட்டக்காரர்களை குண்டர்கள் என்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டால் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிடுவேன் என்றும் டிரம்ப் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications