Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"உயரமான கட்டிடங்களில் ஏறி சாகசம்.." 68-வது மாடியில் இருந்து விழுந்து பலியான இளைஞர்.. சோகம்!

Subscribe to Oneindia Tamil

பாரீஸ்: உயரமான கட்டிடங்களில் இருந்து சாகசம் செய்த படி புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளைஞர் ரெமி லுசிடி, சாகச முயற்சியின் போது கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.

பிரான்சை சேர்ந்தவர் ரெமி லுசிடி. 30-வயதான இவர் உயரமான கட்டிடங்களில் ஏறி சாகசங்களை செய்து வருகிறார். பன்னடுக்கு கட்டிடங்களில் ஏறி ஆபத்தான முறையில் நின்ற படி தனது சாகசங்களை காட்டும் ரெமி லுசிடி அங்கிருந்தபடி செல்பி எடுத்து தனது சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றி வந்தார். இவரது சாகசங்களை பார்த்து பல லட்சம் பேரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர்.

remi-lucidi-a-french-man-who-known-for-skyscraper-stunts-died-after-plummets-from-68th-floor

பிரான்சை சேர்ந்தவர் ரெமி லுசிடி. 30-வயதான இவர் உயரமான கட்டிடங்களில் ஏறி சாகசங்களை செய்து வருகிறார். பன்னடுக்கு கட்டிடங்களில் ஏறி ஆபத்தான முறையில் நின்ற படி தனது சாகசங்களை காட்டும் ரெமி லுசிடி அங்கிருந்தபடி செல்பி எடுத்து தனது சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றி வந்தார். இன்ஸ்டாகிராமில் தனது சாகசங்களை வெளிப்படுத்தி படங்களை ரெமி லுசிடி பதிவேற்றம் செய்து இருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிரபலமாக விளங்கி வந்த ரெமி லுசிடி ஹாங்காங்க் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்குள்ள 68 மாடி கட்டிடத்தில் ஏறி சாகசம் செய்ய முயற்சித்ததாக தெரிகிறது. அப்போது, கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இது குறித்து சீன ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின் விவரம் வருமாறு:- ஹாங்காங்கில் உள்ள டிரெகண்டர் டவர் காம்பிளக்ஸ் 68 - மாடிகளை கொண்டதாகும்.

தனது நண்பரை பார்ப்பதற்காக என்று கூறிவிட்டு இந்த கட்டிடத்திற்கு லுசிடி வந்துள்ளர். கட்டிடத்தின் காவலாளி கேட்டபோது 40-வது மாடியில் உள்ள நண்பரை பார்ப்பதற்காக வந்து இருப்பதாக லுசிடி கூறியுள்ளார். ஆனால், கட்டிடத்தின் பாதுகாவலர்கள் விசாரித்த போது, அதில் உண்மையில்லை என்று தெரியவந்துள்ளது. அவரை நிறுத்துவதற்காக பாதுகாவலர்கள் முயற்சித்து உள்ளனர்.

ஆனால், அதற்குள் எலவேட்டர் மூலமாக அவர் 68-வது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது பென்ட்ஹவுஸ் ஒன்றின் ஜன்னல் கதவை லுசிடி தட்டியிருக்கிறார். இதைக் கவனித்த வீட்டு பணிப்பெண் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். எனினும், அதற்குள் லுசிடி அதற்குள் கீழே விழுந்து இறந்து இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனினும் அவரது இறப்புக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

லுசிடியின் கேமராவை கைப்பற்றிய போலீசார், அதில் முழுவதும் அவரது சாகசங்கள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்று இருந்ததை கண்டெடுத்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு முதலே உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று வரும் லுசிடி, அங்கு பல உயரமான கட்டிடங்களில் இருந்து சாகசமான முறையில் படங்களை எடுத்து பதிவிட்டு வந்துள்ளார்.

கடந்த 16 ஆம் தேதி பல்கேரியா நாட்டில் உள்ள கப்ரவோ என்ற நகரத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் படிக்கட்டில் தொங்கியபடி அவர் புகைப்படம் ஒன்றை எடுத்து இருந்தார். அதன்பிறகு அவர் ஹாங்காங் வந்த இருக்கலாம் என்றும் அப்போதுதான் சாகச முயற்சியின் போது விபரீதம் நிகழ்ந்து இருக்கலாம் என்று அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் கூறும் தகவலாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+