உலகின் முதல் முத்தம்.. மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பே நடந்த அதிசயம்! எப்படி சாத்தியம்?
வாஷிங்டன்: நம்மை போன்ற நவீன மனிதர்கள் சுமார் 2-3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் தோன்றினார்கள். ஆனால் உலகின் முதல் முத்தம் சுமார் 2 கோடி ஆண்டுகளுக்கு முன்னரே கொடுக்கப்பட்டிருக்கிறது. இது எப்படி சாத்தியம் என்பதை ஆய்வாளர்கள் விளக்குகின்றனர்.
முத்தம் என்றால் என்ன? நீர் யானைகள் வாயை பிளந்து சண்டை போடுகிறதே, நாய்கள் தங்கள் குட்டியை நக்குகிறதே, அல்லது பறவைகள் உணவை ஊட்டுகிறதே! இதெல்லாம் முத்தம் கணக்கில் வராது. இது இல்லாமல் உதடு மேல், உதடு வைத்து கொடுக்கப்படுவதுதான் முத்தம்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன் மற்றும் புளோரிடா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உலகின் முதல் முத்தம் எப்போது நடந்தது என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதற்காக அவர்கள் ஃபைலோஜெனெடிக் மேப்பிங் என்கிற முறையை பயன்படுத்தியிருக்கிறார்கள். அதாவது குரங்குகளை பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆய்வு செய்ததில் உலகின் முதல் முத்தம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலில் குரங்குகளின் நடத்தைகளை கண்காணித்திருக்கிறார்கள். ஏனெனில் உலகில் மனிதர்கள் மற்றும் குரங்குகளை தவிர வேறு எந்த உயிரினமும் முத்தமிட்டுக்கொள்வதில்லை. எனவே பல வகையான குரங்குகளை ஆண்டுக்கணக்கில் கண்காணித்திருக்கிறார்கள். அந்த வகையில் முத்தமிடும் குரங்குகளை தனியாக பிரித்திருக்கிறார்கள். பொனபோக்கள், சிம்பான்சிகள், ஒராங்குட்டான் ஆகிய குரங்குகள் முத்தமிடும் பழக்கத்தை கொண்டிருக்கின்றன. எனவே குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பொதுவான மூதாதையர்கள் வாழ்ந்த காலத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வு சுமார் 2 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நம்மை அழைத்து செல்கிறது. இந்த காலம் மிக முக்கியமானதாகும். இந்த காலத்தில்தான் மனிதர்களுக்கும், மனித குரங்குகளுக்கும், சாதாரண குரங்குகளுக்கும் பொதுவான மூதாதையர்கள் வாழ்ந்த காலம். இன்று நாம் வாழும் காலத்தை ஜீரோவாக கணக்கில் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த பரிணாம வளர்ச்சி புரியும். 2 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பொதுவான மூதாதையரிலிருந்து குரங்குகள் தனியாகவும், ஒராங்குட்டான்கள் தனியாகவும் பிரிந்தன. அதன் பின்னர் 1.20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஓராங்குட்டான்களும், மனிதர்களும் பிரிந்தனர்.
பின்னர் 1 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களும், கொரில்லாக்களும் பிரிந்தனர். கடைசியாக 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களும், சிம்பான்சிகளும் பிரிந்தனர். இதனை கணக்கிட்டு பார்த்தால் முதல் முதல் முத்தம் 2 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியுள்ளது. அது இன்று வரை நீடிக்கிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications