Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செவ்வாய் கிரகத்தில் சிட்டி.. 30 வருடத்தில் மனிதர்கள் இருப்பாங்க.. உறுதியாக சொல்லும் எலான் மஸ்க்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் அடுத்த 30 ஆண்டுகளில் நகர கட்டமைப்புடன் மனிதன் வாழ தொடங்குவான் என்று எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் நெட்டிசன் ஒருவர் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

உலக பெரும் பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமாக இருப்பவர் எலான் மஸ்க். விண்வெளி திட்டத்திலும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. மனிதர்களை விண்வெளி சுற்றுலாவிற்கு அனுப்புவது.. செவ்வாய் குறித்த ஆராய்ச்சி என எலான் மஸ்க் நிறுவனம் விண்வெளி ஆய்வில் வேகமாக செயல்பட்டு வருகிறது.

SpaceX chief Elon Musk says humans could be living in a city on Mars in the next 30 years

சூரிய குடும்பத்தில் பூமியை தாண்டி வேறொரு கோளில் மனிதன் வாழ முடியும் சூழலை செவ்வாய் கிரகம் இருக்கும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இதனால், அங்கு மனிதர்கள் உயிர் வாழ சாத்தியம் உள்ளதா என்ற ஆராய்ச்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட விண்வெளி துறையில் முன்னணி வகிக்கும் நாடுகள் ஈடுபட்டுள்ளன.

மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும் சாத்தியம் குறித்தும் எலான் மஸ்க் தொடர்ந்து பேசி வருகிறார். இந்த நிலையில் தான் எக்ஸ் தளத்தில் நெட்டிசன் ஒருவர் எலான் மஸ்கிடம், செவ்வாய் கிரகத்தில் கால் பதிக்க இன்னும் சில ஆண்டுகளே நமக்கு உள்ளது என பதிவிட்டு இருந்தார். இந்த பதிவுக்கு எலான் மஸ்க் அளித்துள்ள பதிலில், "10 ஆண்டுகளுக்குள் மக்கள் செவ்வாய் கிரகத்தில் கால் பதிப்பார்கள். 20 ஆண்டுகளில் அங்கு ஒரு நகரம் அமைக்கப்படலாம்.. ஆனால், 30 ஆண்டுகளுக்குள் நிச்சயமாக குடியேற்றம் அமையும்" என்று பதிவிட்டுள்ளார்.

எலான் மஸ்கின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் வியப்புடன் பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் ஊறுகையில், ஏஐ , விஆர் தொழில் நுட்படத்திற்கு இடையெ தற்போது செவ்வாய்... என் வாழ்நாளில் இதில் எதுவுமே நடக்கும் என நான் எண்ணியது இல்லை.. இது கொஞ்சம் வியப்பானதுதான் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "எனது அடுத்த வாழ்க்கையில் இந்த மாற்றங்களை நான் பார்க்க இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம், எலான் மஸ்க் தனது விண்வெளியில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவது குறித்த திட்டத்தை பகிர்ந்து இருந்தார். 10 லட்சம் பேரை செவ்வாய்கிரகத்திற்கு அனுப்புவேன் என்று கூறியிருந்தார். எனினும், எந்த ஒரு காலக்கெடுவையும் குறிப்பிடவில்லை. அதேபோல், மானுடர்களுக்கு நிலவில் தளம் இருக்க வேண்டும், செவ்வாய் கிரகத்தில் நகரங்கள் இருக்க வேண்டும். மனிதர்கள் நட்சத்திரங்களுக்கு இடையே இருக்க வேண்டும் என்றும் எலன் மஸ்க் கூறியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+