Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை டிஸ்மிஸ் செய்யப்படலாம்.. வந்த அதிர்ச்சி தகவல்.. உண்மையில் என்ன காரணம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கூகுள் நிறுவனம் இப்போது கடும் அழுத்தத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், அந்நிறுவனத்தின் சிஇஓவாக பொறுப்பில் இருந்து சுந்தர் பிச்சை நீக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.

டெல் உலகில் கடந்த பல ஆண்டுகளாகவே ஆதிக்கம் செலுத்தி வந்த நிறுவனம் சுந்தர் பிச்சை. அவர்களின் தேடுபொறி தொடங்கிப் பல வசதிகளை இந்த உலகையே மாற்றி அமைத்துள்ளது எனச் சொன்னால் மிகையாகாது.

Google CEO Sundar Pichai might loss his job As Google fails in AI race experts says Google needs a full transformation

ஆனால் கடந்த சில காலமாகவே கூகுள் நிறுவனத்திற்கு நல்ல காலம் இல்லை போல.. டெக் உலகில் பல ஆண்டுகளாக அசைக்கவே முடியாத இடத்தில் இருந்த கூகுள் சில காலமாக அடி மேல் அடி வாங்கி வருகிறது. குறிப்பாக ஏஐ ரேஸில் அவர்கள் பின்தங்கி இருக்கிறார்கள்.

மைக்ரோசாப்ட் முதலீடு செய்துள்ள சாட் ஜிபிடி வேற வெலவில் வளர்ந்து வருகிறது. மைக்ரோசாப்ட் தனது சாப்ட்வோர்களிலும் இந்த சாட் ஜிபிடிக்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. ஆனால், ஏஐ துறையில் கூகுள் முற்றிலும் சொதப்பிவிட்டது. அவர்கள் ஒவ்வொரு முறையும் ஏஐ அறிமுகப்படுத்தும் போது, அது திடீரென தவறான பதில்களைத் தர அது கூகுள் நிறுவனத்திற்குத் தர்மசங்கடத்தையே ஏற்படுத்துகிறது.

சமீபத்தில் கூகுள் நிறுவனம் ஜெமினி ப்ரோ 1.0 மாடலை 230க்கும் மேற்பட்ட நாடுகளில் 40க்கும் மேற்பட்ட மொழிகளில் அறிமுகம் செய்து இருந்து. மாதம் சுமார் 20 டாலர் கட்டணத்தில் இது அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இதில் பல வசதிகள் தரப்பட்டு இருந்தது. இருப்பினும், இதன் இமேஜ் ஜெனரேட்டர்களில் சில பிரச்சினைகள் இருக்கிறதாம். அதாவது பன்முகத்தன்மை என்ற பெயரில் ஜெமினி ப்ரோ செய்யும் சில நடவடிக்கையே இதற்கு காரணம்.

ஜெமினி ப்ரோ படங்களை உருவாக்கும் போது பெரும்பாலும் வெள்ளை இன மக்களைக் காட்டுவதே இல்லை என்ற புகார் இருக்கிறது. அதாவது வெள்ளை இன மக்களின் படங்களை உருவாக்கச் சொல்லும் போது துல்லியமாக உருவாக்க முடிவதில்லை. பிரிட்டன் இளவரசர், போப் உள்ளிட்டோரை இது சர்ச்சைக்குரிய வகையில் உருவாக்கி இருக்கிறது. இதனால் ஜெமினி இன ரீதியான பாகுபாட்டைக் காட்டுவதாகப் பலரும் சாடினர்.

முதலில் இந்த சிக்கல் சில வாரங்களில் சரி செய்யப்படும் என கூறப்பட்டது. இருப்பினும், இதில் பல சிக்கல்கள் இருப்பதால் இதை முழுமையாகச் சரி செய்ய சில மாதங்கள் வரை ஆகும் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஏஐ பிரிவில் இப்படி மொத்தமாகச் சொதப்பியது கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியரான சுந்தர் பிச்சை கூகுள் சிஇஓ பதவியில் இருந்து நீக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாகப் பிரபல இந்திய அமெரிக்கத் தொழிலதிபரும் முதலீட்டாளருமான சமீர் அரோரா தனது எக்ஸ் பக்கத்தில், "அவர் (சுந்தர் பிச்சை) நீக்கப்படுவார் அல்லது ராஜினாமா செய்வார் என்று நான் நினைக்கிறேன். இது நடந்தே ஆக வேண்டும். ஏஐ துறையில் முன்னணியில் இருந்த போதும் அதில் அவர்கள் கோட்டை விட்டுவிட்டார்கள். மற்றவர்கள் வழிநடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்றார்.

அதேபோல வல்லுநர்கள் பென் தாம்சன் மற்றும் மார்க் ஷ்முலிக் ஆகியோரும் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். கூகுளில் உள்ள சில விஷயங்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக சிஇஓ சுந்தர் பிச்சையை மாற்றுவது சரியாக இருக்கும் எனக் கூறியிருக்கின்றனர். தற்போதைய தலைமை வரும் காலத்தில் கூகுளை வழிநடத்துமா என்பது சந்தேகமே எனக் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+