Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம தில்.. இந்தியாவின் எழுச்சியை ஆதரிக்கிறோம்.. ஆச்சர்யப்பட்ட அமெரிக்கா.. திடீர் அறிக்கை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: "சீனாவை எதிர்த்து நிற்க விருப்பமும் திறன்களும் இருப்பதை இந்தியா நிரூபித்துள்ளது" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் துணை உதவியாளரும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தெற்கு மற்றும் மத்திய ஆசியா பணியகத்தின் இயக்குநருமான லிசா கர்டிஸ் கூறினார்.

Recommended Video

    India-China Fight : India extends Safeguard Duty On Chinese Solar Equipment |Oneindia Tamil

    அமெரிக்க சிந்தனைக் குழுவான ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷனுக்கு வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரியாகவும் உள்ள லிசா கர்டிஸ் கூறுகையில், சீ லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சீனாவின் சமீபத்திய ஆக்கிரமிப்பு நிலைப்பாடு உலகின் பிற பகுதிகளில் சீனாவின் மக்கள் ராணுவத்தின் ஆக்கிரமிப்புடன் பொருந்துகிறது" என்று கூறினார்.

    இந்தியப் பெருங்கடலிலும் அதற்கு அப்பாலும் ஒரு சக்தியாகவும், நிகர பாதுகாப்பு வழங்குநராகவும் திகழும் இந்தியாவின் எழுச்சியை அமெரிக்கா ஆதரிக்கிறது என்றும் கர்டிஸ் கூறினார்.

    மற்ற நாடுகளுக்கு ஊக்கம்

    மற்ற நாடுகளுக்கு ஊக்கம்

    தற்போதைய இந்தியா-சீனா இடையிலான நெருக்கடி பற்றி, கர்டிஸ் கூறுகையில், "லடாக்கில் ஆக்கிரமித்த சீனாவுக்கு பதிலடியாக இந்தியா, சீனாவின் ஆப்களை தடைசெய்துள்ளது. சீனாவின் முதலீட்டு ஒப்பந்தங்களை நிறுத்தியுள்ளது, இதன் மூலம் சீனாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை இந்தியா விதித்துள்ளது. . இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் மற்ற நாடுகள் இதை மிகவும் கவனமாக கவனித்து வருவதாக நான் நினைக்கிறேன், மேலும் இந்தியாவின் இந்த தீர்மானம் மற்ற நாடுகளுக்கு ஊக்கமாக இருக்கும்.

    சீனா நினைப்பு

    சீனா நினைப்பு

    ஏனெனில் சில நாடுகள் இந்தியாவை விட சீனாவின் "மோசமான செல்வாக்கை" நன்கு அறிந்திருக்கின்றன. இந்நிலையில் லடாக்கில் சில பதட்டமான வாரங்களுக்குப் பிறகு சீன மற்றும் இந்தியப் படைகள் விலக்கப்படுவதைக் காண முடிகிறது... ஆனால் இந்த அழுத்தம் இந்தியாவுடன் எல்லை பாதுகாப்பு கோட்டு பகுதியில் சீனாவின் நிலைப்பாடு பற்றியதாகும். இந்தியா உறவை சீனா எவ்வாறு கருதுகிறது என்பதை பற்றியது. இது நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த எல்லை விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான இயக்கவியலையே மாற்றிவிடும் .

    இந்தியாவின் வளர்ச்சி

    இந்தியாவின் வளர்ச்சி

    இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சீனா இந்தியாவை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்தியா பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியதாக காணப்பட்டது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் வளர்ச்சி மற்றும் இராணுவத் திறன்கள் அதிகரிக்க தொடங்கியவுடன், இந்தியாவும் சீனாவும் ஒன்றிணைந்து செயல்பட்டு ஆசியாவில் பெரிய அளவில் முன்னேறும் என்று நினைத்த காலம் இருந்தது. ஆனால் 2010 ம் ஆண்டுக்கு பின்னர் நீண்டகால எல்லைப் பிரச்சினையில் வேறுபாடுகள் மீண்டும் தோன்றியுள்ளன. ஒவ்வொரு நாடும் மற்றொன்றின் எழுச்சிகள் காரணமாக "சங்கடமாக" மாறியிருக்கிறது. இலங்கை, மாலத்தீவு மற்றும் நேபாளம் போன்ற இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனாவின் செல்வாக்கு, பொருளாதாரம் முதல் உள்நாட்டு அரசியல் வரை மேலும் மேலும் தலையிடும் வகையில் நகர்ந்துள்ளது.

    இந்தியாவுக்கு சந்தேகம்

    இந்தியாவுக்கு சந்தேகம்

    சீனா எப்படி பார்க்கிறதோ அப்படித்தான் அமெரிக்காவும் பார்க்க வேண்டும். இந்தியாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே சீனாவின் பொருளாதார வழித்தட திட்டம் குறித்து ஒரு சந்தேகம் இருந்தது ... அவர்கள் 2017ல் பி.ஆர்.ஐ ( பொருளாதார வழித்தடம்) மாநாட்டிற்கு ஒரு பிரதிநிதியை அனுப்பவில்லை. சீனாவின் சிறப்பு பொருளாதார வழித்தடம் பற்றிய முயற்சியைப் பற்றிய அவர்களின் ஆரம்பகால சந்தேகம் உண்மையில் வெளிவருகிறது என்று நான் நினைக்கிறேன், அவை இப்போது மிகவும் மதிப்புமிக்கதாகத் தெரிகிறது.

    உறவு வலுவடையும்

    உறவு வலுவடையும்

    அமெரிக்க-இந்தியா இடையே நட்புறவு, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பை விட அதிகம். இது எங்கள் இரு நாடுகளையும் மிகவும் வளமானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றிய ஜனநாயக மரபுகளைப் பற்றியதாகும். இந்தோ பசிபிக் பகுதியில் திறந்த மற்றும் வெளிப்படையான பிராந்தியத்திற்கு இரு நாடுகளும் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டின் அடிப்படையில் அமெரிக்கா-இந்தியா இடையே நட்புறவு இன்னமும் ஆழமடையும். அந்த உறவை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம் என்பதையும், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் பிற நாடுகள் தங்கள் இறையாண்மையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதையும், அவர்களுக்கு சீனாவுக்கு தேர்வுகள் மற்றும் மாற்று வழிகள் உள்ளன என்பதையும் நீங்கள் விரைவில் பார்க்க போகிறீர்கள்.

    சீனாவின் சிபிஇசி

    சீனாவின் சிபிஇசி

    இந்தியாவை ஒப்பிடும் போது சீனா-பாகிஸ்தான் உறவு (CPEC) மிகவும் நெருக்கமாக வளர்ந்துள்ளது. "சிபிஇசிக்கான சீன உறுதிமொழிகள் இப்போது 60 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளன, ஆனால் சிபிஇசி வெளிநாட்டு உதவி அல்ல, அதேநேரம் சீனாவின் சொந்த வளர்ச்சியை ஈட்டிய பங்கு முதலீடு அல்ல. சிபிஇசி என்பது ஒரு நாட்டின் இறையாண்மை கடனால் நிதியளிக்கப்படுகிறது, அதை திருப்பிச் செலுத்த வேண்டும். அந்த ஆபத்தை பாகிஸ்தான் மக்கள் சுமக்கின்றனர். இதனால் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான் நன்மை " இவ்வாறு கூறினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+