"அத்தனையும் ஆபாசம்!" பள்ளியில் மாணவருடன் உடலுறவு! காவலுக்கு மற்ற மாணவர்கள்! அப்பாவுக்கும் தெரியுமாம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியை ஒருவரே மாணவர்களுடன் நெருக்கமாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மிசோரி என்ற பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியை ஒருவர், பள்ளி மைதானத்தில் இளம்பெண் ஒருவருடன் உடலுறவு கொண்டுள்ள சம்பவம் பகீர் கிளப்புவதாக உள்ளது.

இதில் மோசமான சம்பவம் என்றால் வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களை வேறு யாராவது வருகிறார்களா என்பதைக் கண்காணிக்கவும் வைத்துள்ளார் இந்த ஆசிரியை.. இந்தச் சம்பவம் இப்போது வெளிச்சத்திற்கு வந்த நிலையில், அந்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்
ஆசிரியை: புலாஸ்கி கவுண்டியில் உள்ள லக்கி உயர்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியரான ஹெய்லி கிளிஃப்டன்-கார்மேக் என்பவர் தான் இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார். அவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது பலாத்காரம், மாணவர் உடன் பாலியல் தொடர்பு மற்றும் குழந்தைகளைத் துஷ்பிரயோகம் செய்வது என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆசிரியை டெக்சாஸில் கைது செய்யப்பட்ட நிலையில், சம்பவம் நடந்த மிசோரிக்கு அவரை அழைத்து வரும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த மோசமான சம்பவம் குறித்து மாணவர் ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த பிறகே இந்த மோசமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆசிரியை உடன் உறவில் இருந்த 16 வயது மாணவர், தனது முதுகில் ஏற்பட்ட கீறல்களை போலீசாரிடம் காட்டி வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஏற்கனவே தெரியும்: இந்த ஆசிரியை கிளிஃப்டன் எப்போதும் மாணவர்களுடன் மிகவும் நெருக்கமானவர் என்றே மாணவர்கள் கூறியுள்ளனர். ஆனால், நெருக்கம் என்றால் இப்படியொரு நெருக்கம் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அதேநேரம் கிளிஃப்டன் மாணவர்களுடன் இப்படி நெருக்கமாக இருப்பது குறித்து பள்ளி முதல்வர் மற்றும் லாக்வி பள்ளி கண்காணிப்பாளர் ஆகிய இருவருக்கும் ஏற்கனவே தெரியும் என்ற அதிர்ச்சி தகவலையும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த விவகாரத்தில் ஆசிரியரின் மொபைலை செக் செய்யவும் அதிகாரிகள் வாரண்ட் பெற்றுள்ளனர். கிளிஃப்டன் எந்த பிரச்சினையும் செய்யாமல் மொபைலை கொடுத்துள்ளார்.. மேலும், எந்தவொரு குற்ற உணர்வும் இல்லாமல் ரொம்பவே இயல்பாகவே அவர் நடந்து கொண்டுள்ளார். மொபைலை கொடுத்தாலும் அதன் பாஸ்வோர்ட்டை கிளிஃப்டன் தரவில்லையாம்.
மிரண்ட போலீஸ்: பிறகு ஹேக் செய்தே அந்த தகவல்களை அணுகியுள்ளனர். அதில் அந்த மாணவருடன் சொல்லவே முடியாத அளவுக்கு மிக மோசமான வகையில் அந்த பெண் உரையாடியுள்ளதைப் பார்த்து போலீசார் மிரண்டு போனார்கள். பள்ளியிலேயே இந்த மாணவரும் ஆசிரியையும் உறவில் ஈடுபடும் நிலையில், யாரும் பார்க்காமல் இருக்க மற்ற மாணவர்களை வெளியே நிற்க வைத்துக் கவனிக்க வைத்துள்ளார்.
16 வயதான அந்த மாணவரின் தந்தைக்கும் இவர்கள் உறவைப் பற்றித் தெரியும் என்பது மற்றொரு ஷாக் தகவல்.. இது குறித்து அவரது தந்தை கூறுகையில், "இது குறித்து எனக்கு முன்பே தெரியும். அந்த ஆசிரியை ஊரை விட்டுச் செல்லும் போது கூட எனது வீட்டில் வந்து எனது பையனை பார்த்துவிட்டே சென்றார். நான் என்ன சொன்னாலும் அவர்களை இதை விட மாட்டார்கள். எனக்குப் பின்னால் இதைச் செய்வார்கள் எனத் தெரியும். இதன் காரணமாகவே நான் அவர்களிடம் எதுவும் சொல்லவில்லை" என்றார்.
இந்த விவகாரத்தில் அந்த மாணவரின் தந்தையையும் போலீசார் கைது செய்துள்ளனர். இருப்பினும், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில், அவர் விடுவிக்கப்பட்டார். மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியையே மாணவருடன் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் பேசுபொருள் ஆகியுள்ளது.












Click it and Unblock the Notifications