30 ஆண்டுகள் இல்லாத கடும் குளிர்.. அப்படியே உறைந்துப் போன டெக்சாஸ்.. 1 வாரமாக கரெண்ட், குடிநீர் இல்லை
வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத கடும் குளிர் வாட்டி வருகிறது. பெரும் பனிக்கட்டிகள் சாலை முழுக்க சூழ்ந்து கிடக்கின்றன. பல இடங்களில் ஒரு வாரமாக மின் இணைப்பு, குடிநீர் சப்ளை இல்லாமல் மக்கள் அவதிபடுகிறார்கள்.
பொதுவாக டெக்சாஸ் மாகாணம் அதிகமாக கடும் குளிர் பதிவாக கூடிய பிராந்தியம் கிடையாது. ஆனால் இந்த வருடம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மிக மோசமான அளவிற்கு குறைந்த பட்ச வெப்பநிலை அங்கு பதிவாகியுள்ளது.
இந்த வாரத்தில் அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 18 டிகிரி செல்சியஸ் வரை இறங்கி போனதால் மக்கள் குளிர் காரணமாக உறைந்து போயுள்ளனர்.

சாலையெங்கும் பனிக் கட்டி
சாலைகள், வீடுகளின் மீது எனக்கும் பனிக் கட்டிகளாக காணப்படுகின்றன. கடந்த ஒரு வாரமாகவே மின் இணைப்பு இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வெள்ளிக்கிழமை நிலவரப்படி டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.

மின் இணைப்பு, குடிநீர் இல்லை
சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின் இணைப்பு இல்லாமல் மின் துண்டிப்பு காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாக டெக்சாஸ் மாகாண நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் பாதி அளவுக்கு அதாவது 13 மில்லியன் என்ற அளவுக்கு மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. உறைபனி காரணமாக குடிநீர் வழங்கல் ஸ்தம்பித்துப் போயுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகரம் ஆஸ்டின் நகரில் சுமார் 1.2 பில்லியன் லிட்டர் தண்ணீர் குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக வீணாக போய் உள்ளது.

டெக்சாஸ் பேரிடர்
நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும் நிலையில்தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெக்சாஸ் மாகாணம் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அறிவிப்பதன் மூலமாக கூடுதலாக நிதி ஒதுக்கி நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியும் என்கிறார்கள் அரசு வட்டாரத்தில்.

டெக்சாஸ் கடும் குளிர்
டெக்சாஸ் மாகாணத்தில் நேரடியாக சென்று ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது செல்வது மீட்பு பணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும். தன்னால் அங்குள்ள அதிகாரிகளுக்கு கூடுதல் பணிச் சுமை ஏற்படும் என்று அவர் கருத்து கூறியுள்ளார். அமெரிக்க முழுக்கவே இந்த கடுமையான குளிர் காரணமாக 60 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications