உலகளவில் 2-வது அலை மிக மோசம்.. தினசரி பாதிப்பில் இந்தியா புதிய உச்சம்.. ஒரே நாளில் 3,293 பேர் பலி!
வாஷிங்டன்: இந்தியாவில் கொரோனா தொடர்ந்து உலகளவில் முதலிடம் பிடித்து தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது. 3,60,960 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,293 பேர் கொரோனாவுக்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video
அதிக தொற்று பாதிப்பில் 2-ம் இடத்தில் உள்ள பிரேசிலில் 76,085 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 3,120 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் நீதிபதிகளுக்கு கொரோனா சிகிச்சை... ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் 100 அறைகள் தயார்
கொரோனா அதிகரிப்பு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் கொரோனா தொடர்ந்து போட்டு தாக்கி வருகிறது. உலகம் முழுவதும் 149,313,244 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 3,148,012 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 127,451,058 பேர் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்கா நிலை என்ன?
அமெரிக்காவில் கொரோனா முன்பை விட குறைந்து வருகிறது. அங்கு 51,249 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 871 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பிரேசிலில் தொடர்ந்து பாதிப்பு அதிகமாக வருகிறது. அங்கு ஒரே நாளில் 76,085 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது .பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,120 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
இந்தியா முன்னிலை
இந்தியாவிலும் கொரோனா தொடர்ந்து அடங்காமல் ஆட்டம் போட்டு வருகிறது. உலகளவில் கொரோனா தினசரி பாதிப்பில், உயிரிழப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உச்சபட்ச அளவாக 3,60,960 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 3,293 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 29,78,709 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. இந்தியாவில் இதுவரை 1,79,97,267 பேர் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை மொத்தம் 2,01,187 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,48,17,371 பேர் குணமடைந்துள்ளனர். இங்கிலாந்தில் 2,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவால் மேலும் 17 பேர் பலியாகியுள்ளனர்.
ரஷ்யாவில் உயிரிழப்பு
பிரான்சில் 30,317 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மேலும் 333 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் புதிதாக 10,404 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனாவால் மேலும் 373 பேர் இறந்துள்ளனர். ரஷ்யாவில் புதிதாக 8,053 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கொரோனாவுக்கு 392 பேர் பலியாகியுள்ளனர். ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 19,009 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 354 பேர் உயிரிழந்துள்ளனர்.துருக்கியிலும் கொரோனா அதிகரித்து வருகிறது. அங்கு மேலும் 43,301 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மேலும் 346 பேர் பலியாகியுள்ளனர்.