கிரீன்லாந்தை ஆக்கிரமிக்க ரெடியாகும் டிரம்ப்? மிக முக்கிய நடவடிக்கை! அடுத்து களமிறக்கப்படும் ராணுவம்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்ய கிரீன்லாந்து கட்டாயம் தேவை என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். அத்தோடு நிற்காமல் தனது இப்போது கிரீன்லாந்து தொடர்பாக முக்கியமான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளார். இதற்கு கிரீன்லாந்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!

அமெரிக்க அதிபரான டிரம்ப் தனது இஷ்டத்திற்குத் தடாலடி அறிவிப்புகளுக்குப் பெயர்போனவர். அவருடைய அறிவிப்புகளும் பேச்சுகளும் தொடர்ந்து சர்வதேச அளவில் பதற்றத்தையும் குழப்பத்தையுமே ஏற்படுத்தி வருகிறது. அப்படித் தான் டென்மார்க்கின் ஒரு பகுதியாக இருக்கும் கிரீன்லாந்து நாட்டை வாங்கப் போவதாகச் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். இது அப்போதே பெரிய விவாதமாக மாறியிருந்தது.

Trump Appoints MAGA Ally as Greenland Envoy Renews Push for US Control Denmark Warns Sovereignty

சிறப்புத் தூதர்

இதற்கிடையே கிரீன்லாந்து முதல் சிறப்புத் தூதரை டிரம்ப் இப்போது நியமித்துள்ளார். டிரம்பின் "மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்" ஆதரவாளரான ஜெஃப் லாண்ட்ரி கிரீன்லாந்தின் சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். கிரீன்லாந்து ஒரு நாடு இல்லை.. டென்மார்க்கின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. இதனால் முன்பு கிரீன்லாந்திற்கு எனத் தனியாகத் தூதரை அமெரிக்கா கொண்டிருக்கவில்லை. இருப்பினும், எப்படியாவது கிரீன்லாந்தைத் தன்வசப்படுத்த வேண்டும் என டிரம்ப் விரும்புவதாலேயே இந்தப் பதவியை உருவாக்கியுள்ளார்.

இது குறித்து டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், "கிரீன்லாந்து எங்களது தேசியப் பாதுகாப்புக்கு எவ்வளவு முக்கியம் என்பதை ஜெஃப் புரிந்துகொள்கிறார். நமது நட்பு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் சர்வதேச நலன்களை ஜெப் புரிந்து கொண்டுள்ளார். அமெரிக்கத் தேசிய நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்" என்றார்.

கிரீன்லாந்து

வட துருவத்திற்கு அருகே அமைந்துள்ள பிரம்மாண்ட நிலப்பரப்பான கிரீன்லாந்து இப்போது டென்மார்க் நாட்டிற்குச் சொந்தமாக இருக்கிறது. மிகக் குறைந்த மக்கள் தொகையே கிரீன்லாந்தில் இருந்தாலும் கூட அங்கு அதிகளவில் இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கிறது. மேலும், ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுக்கவும் கிரீன்லாந்து தேவை என டிரம்ப் கருதுகிறார். இதன் காரணமாகவே அவர், கிரீன்லாந்து மீது ஆர்வம் காட்டுகிறார். எப்படியாவது கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாக உள்ளது. அதற்கு முதல் நடவடிக்கையாகவே சிறப்புத் தூதர் நியமனத்தை நாம் பார்க்கலாம்.

டென்மார்க் எதிர்ப்பு

இதற்கிடையே டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு டென்மார்க்கின் வெளியுறவு அமைச்சர் லார்ஸ் லோக்கி ராஸ்முசென் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட அனைவரும் டென்மார்க் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். டிரம்பின் இந்த நடவடிக்கை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்றும் இது தொடர்பாக அமெரிக்காவிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், டென்மார்க் இறையாண்மையை அச்சுறுத்தும் எவரையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

ராணுவம்

இதற்கு முன்பே டிரம்பின் இந்த முயற்சிகளுக்கு டென்மார்க் கடும் எதிர்ப்பு தெரிவித்துவிட்டது. இருந்த போதிலும் டிரம்ப் அதை ஏற்பதாகத் தெரியவில்லை. அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து முக்கியம் என்ற அவர், இதற்குத் தேவையென்றால் ராணுவத்தை கூட பயன்படுத்துவோம் என்பது போலச் சில மாதங்களுக்கு முன்பு குறிப்பிட்டிருந்தார். இந்தச் சூழலில் தான் அவர் சிறப்புத் தூதரையும் நியமித்துள்ளார். இதனால் வரும் நாட்களில் கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் கவனம் அதிகரிக்கும் என்றே சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+