Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீதிமன்றம் குட்டு வைத்தும் அடங்காத டிரம்ப்.. 10% வரியை 15% உயர்த்தி அறிவிப்பு.. ஆட்டம் முடியப்போகுது

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளுக்கு போட்டிருந்த பரஸ்பர வரி என்பது செல்லாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவித்திருந்தது. இந்நிலையில், மற்றொரு சட்டத்தை பயன்படுத்தி டிரம்ப் உலக நாடுகள் அனைத்துக்கும் 10% வரியை அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்த வரியை தற்போது 15% ஆக உயர்த்தியுள்ளார்.

வரி விஷயம்தான் உலகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக ஹாட் டாப்பிக். வரி காரணமாக சர்வதேச அளவில் டாலர் மீதான மதிப்பு குறைய தொடங்கியது. எனவே முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய.. தங்கத்தின் ரேட் விண்ணை முட்டியது.

Trump tariff Trade

இந்தியாவும் அமெரிக்க வரிக்கு கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே இந்த வரியை குறைக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தத்த போட்டது. இந்த ஒப்பந்தம் இந்திய விவசாய சங்கங்களால் கடுமையாக எதிர்க்கப்படும் நிலையில், நேற்று இந்த வரி குறித்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவை கொடுத்தது. அதாவது, டிரம்ப் போட்ட பரஸ்பர வரி என்பது சட்டவிரோம் என்றும், இந்த வரி இனி செல்லாது என்றும் அறிவித்தது.

இந்த அறிவிப்பு சர்வதேச நாடுகளுக்கு நிம்மதியை கொடுத்தாலும், டிரம்புக்கு எரிச்சலைதான் ஏற்படுத்தியிருந்தது. நீதிமன்ற உத்தரவு வந்த கையோடு, அமெரிக்காவின் மற்றொரு சட்டத்தை பயன்படுத்தி மொத்த நாடுகளுக்கும் 10% வரியை விதித்திருந்தார். இந்நிலையில் இந்த வரியானது தற்போது 15% ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார். அமெரிக்காவை பொருத்தவரை ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் பதிவிடுவதுதான் சட்டம்.

முன்னதாக பரஸ்பர வரியை சட்ட விரோதம் என்று கூறிய நீதிபதிகளை டிரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த உத்தரவு மொத்த அமெரிக்காவுக்கும் எதிரானது என்றும், மிக மோசமாக எழுதப்பட்ட தீர்ப்பு என்றும் விமர்சித்திருந்தார். இத்தனை ஆண்டுகளாக அமெரிக்காவை ஏமாற்றியிருந்த நாடுகளுக்கு எதிராக விதிக்கப்பட்ட இந்த வரி தண்டனை வரியாகும் என்று கூறியிருந்தார்.

இந்தியா மீது விதிக்கப்பட்ட வரியை பொறுத்தவரை, மொத்தம் 50% வரி விதிக்கப்பட்டிருந்தது. இதில் 25% வரியானது ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறோம் என்பதற்காக போடப்பட்டது. எனவே வேறு வழியின்றி இந்தியாவும் ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதை நிறுத்தி விட்டது. எனவே மொத்த வரி 50லிரு்நது 18% ஆக குறைக்கப்பட்டது. இருப்பினும் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இந்த வரி 10% ஆக குறைந்தது. இதை விரும்பாத டிரம்ப் 15% ஆக தற்போது வரியை ஏற்றியுள்ளார்.

இதற்கு அவர் பயன்படுத்தி சட்டம், அமெரிக்க அரசியலமைப்பு பிரிவு 122தான். இந்த சட்டத்தின் படி வரியை போட முடியும். ஆனால் அந்த வரி 150 நாட்களுக்கு மட்டும்தான் அமலில் இருக்கும். அதன் பின்னரும் வரி நீடிக்க வேண்டும் எனில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+