டிரம்பின் அடுத்த டார்கெட் சீனா?.. ஈரானுக்கு ஆயுதம் தந்தால் விளைவு மோசமாக இருக்கும்! புதிய ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: "சீனா மட்டும் ஈரானுக்கு ஆயுதங்களை விநியோகித்தால், அவர்கள் மிகப்பெரிய சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்" என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரடியாகவே சீனாவுக்கு 'வார்னிங்' கொடுத்துள்ளார்.

ஏற்கனவே ஈரான் - அமெரிக்கா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், சீனாவின் இந்த மூவ் உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pakistan USA Iran

என்ன நடக்கிறது?

ஈரானுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை (Air Defence Systems), குறிப்பாக தோளில் வைத்து ஏவக்கூடிய ஏவுகணைகளை (MANPADs) சீனா வழங்கத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறைக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. அடுத்த சில வாரங்களில் இந்த ஆயுதங்கள் ஈரானைச் சென்றடையலாம் என்றும், அதன் பூர்வீகத்தை மறைக்க மூன்றாம் தரப்பு நாடுகள் வழியாக இதை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளதாகவும் சி.என்.என் (CNN) செய்தி வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மியாமி புறப்படும் முன் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "ஆமாம், சீனா அதைச் செய்தால், சீனாவுக்குப் பெரிய பிரச்சினைகள் காத்திருக்கிறது, ஓகே?" எனத் தனது பாணியில் சுருக்கமாகவும், மிரட்டலாகவும் பதிலளித்தார்.

எல்லாமே டிரேட் பாலிசி தானா?

இது குறித்து அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் கூறுகையில், "சீனாவுடன் பொருளாதார ரீதியாக ஒரு நிலையான உறவை பேணவே அமெரிக்கா விரும்புகிறது. ஆனால், அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக ஈரானுடன் சீனா கைகோர்த்தால், அது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைச் சிக்கலாக்கும். அதைத் தவிர்க்க வேண்டியது சீனாவின் பொறுப்பு" எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் ஒரு முக்கியமான சந்திப்பை நடத்தவுள்ள நிலையில், இந்த விவகாரம் அங்கே எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் - அமெரிக்கா: ஒரு நீண்டகாலப் பகை

1979-ல் ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சி மற்றும் அமெரிக்கத் தூதரகப் பிணைக் கைதிகள் விவகாரத்தில் தொடங்கிய இந்தப் பகை, பல தசாப்தங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

2018: அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்.

2020: ஈரானிய ஜெனரல் காசிம் சுலைமானி படுகொலை.

2025: ஈரான் அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல்.

2026 பிப்ரவரி: அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது, உலகையே அதிர வைத்தது.

இதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களால் ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, உலகப் பொருளாதாரம் ஆட்டம் கண்டது.

இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை

தற்போது பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளுக்கும் இடையே உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏப்ரல் தொடக்கத்தில் எட்டப்பட்ட ஒரு மெல்லிய போர்நிறுத்தத்தை நீட்டிக்கவே இந்த முயற்சி. இந்த அமைதி ஒப்பந்தம் வரும் ஏப்ரல் 22-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் கடும் அவநம்பிக்கை கொண்டுள்ள சூழலில், சீனா ஈரானுக்கு முட்டுக் கொடுக்க நினைப்பது, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்காவின் இந்த எச்சரிக்கைக்குச் சீனாவின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்? மீண்டும் ஒரு வர்த்தகப் போர் (Trade War) வெடிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+