பாகிஸ்தான் வான் எல்லையை பயன்படுத்த வேண்டாம்.. அமெரிக்க விமானங்களுக்கு தடாலடி உத்தரவு
Recommended Video
வாஷிங்டன்: தீவிரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தக் கூடிய அபாயம் இருப்பதால், பாகிஸ்தான் வான்வெளியில் அமெரிக்க விமானங்கள் பறக்க வேண்டாம் என்று அந்த நாட்டு அரசாங்கம் தடாலடியாக ஒரு எச்சரிக்கையை பிறப்பித்து உள்ளது.
அனைத்து அமெரிக்க அரசு விமானங்கள் மற்றும் வர்த்தக ரீதியான விமானங்கள் பாகிஸ்தான் எல்லையை தவிர்க்க வேண்டும் என்று அந்த எச்சரிக்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒரு எச்சரிக்கையை பிறப்பிப்பதற்கு என்ன காரணம் என்பதும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், கூறியுள்ளதாவது: பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் அல்லது தீவிரவாத குழுக்கள் அமெரிக்க விமானங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, குறைந்த உயரத்தில் பறக்கக் கூடிய விமானங்கள் இதுபோன்ற தாக்குதலுக்கு இலக்காக கூடும். தரையிறக்கம் மற்றும் ஏற்றம் போன்ற நேரங்களில் தாக்குதல் அபாயம் அதிகமாக உள்ளது. ஏனெனில் அப்போது விமானம் குறைந்த உயரத்தில் பறக்கும். விமானங்களை அழிக்கக் கூடிய ஏவுகணைகள் உள்ளிட்ட கருவிகளின் மூலமாக இந்தத் தாக்குதல் நடத்தக் கூடிய அபாயம் இருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
United States warns its air carriers to avoid Pakistan airspace, it may be a risk & possible threat of attacks on US airlines (commercial&US state carrier) by Pakistan extremist & militant groups. pic.twitter.com/2lxcbljbPK
— ANI (@ANI) January 2, 2020
2020 ஆம் ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் இவ்வாறு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது பாகிஸ்தானில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற இந்திய வாதத்துக்கு வலு சேர்ப்பது போல இந்த உத்தரவு அமைந்துள்ளது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications