புவி வெப்பமயமாதலுக்கு இந்தியாதான் முழு பொறுப்பு.. உண்மைக்கு புறம்பாக பேசிய டொனால்ட் டிரம்ப்
வாஷிங்டன்: புவி வெப்பமயமாதலுக்கு இந்தியாதான் முழு பொறுப்பு என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
முதல் முறையாக இரு அதிபர் வேட்பாளர்களும் சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில் டிரம்ப் மீது ஜோ பிடன் ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

கொரோனா வைரஸால் அமெரிக்காவில் 2 லட்சம் பேர் பலியானதாக சுட்டிக் காட்டிய ஜோ பிடன், வேறு எந்த நாட்டிலும் பலி எண்ணிக்கை இத்தகைய அளவுக்கு இல்லை என்றார். அதற்கு பதிலளித்த டிரம்ப், கொரோனா இறப்புகளை இந்தியாவும் சீனாவும் துல்லியமாக கொடுக்கவில்லை என குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து பருவநிலை மாற்றம் குறித்த விவாதம் நகர்ந்தது. அப்போது ஜோபிடன் கூறுகையில் பாரீஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து டிரம்ப் விலகிவிட்டார். தான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் அந்த பாரீஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவேன் என அமெரிக்க மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.
உலகின் புவி வெப்பமயமாதலுக்கு 15 சதவீதத்திற்கு அமெரிக்காவே பொறுப்பு என ஜோ பிடன் சொல்லி முடித்த கையோடு டிரம்ப் இந்தியா மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். டிரம்ப் கூறுகையில் மற்ற நாடுகள், அமெரிக்காவை விட புவி வெப்பமயமாதலுக்கு இந்தியாதான் காரணம்.
சீனா மாசுக்களை காற்றில் பறக்க விடுகிறது. ரஷ்யாவும், இந்தியாவும் அதே தவறை செய்கின்றன என்றார் டிரம்ப். இந்தியாவை நட்பு நாடு என்றும் பிரதமர் நரேந்திர மோடி தனது நண்பர் என்றும் வாய்க்கு வாய் கூறும் டிரம்ப், இந்தியா மீது அவ்வப்போது உண்மைக்கு புறம்பான மற்றும் தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications