"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர்
வாஷிங்டன்: மத்திய கிழக்கில் இன்னும் முழுமையாக அமைதி திரும்பாத நிலையில், எப்போது வேண்டும் என்றாலும் தாக்குதல் வெடிக்கும் என்ற பரபரப்பான சூழலே நிலவுகிறது. இதற்கிடையே அங்கு அமெரிக்காவுக்கு சொந்தமான அப்பாச்சி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது பகீர் கிளப்பியுள்ளது. அந்த ஹெலிகாப்ட்டரை ஈரான் தான் தாக்கியதாகவும் அதற்குப் பதிலடி கொடுக்கப் போவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது நிலைமையை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.
மத்தியக் கிழக்குப் பகுதியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. நேரடியான போர் நின்றுவிட்ட போதிலும் பதற்றம் தணியவில்லை. மேலும், அவ்வப்போது இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. இதனால் அங்கு நிலைமை மோசமாகவே இருக்கிறது.

அமெரிக்க ஹெலிகாப்டர்
இதற்கிடையே ஓமன் கடற்கரை அருகே அமெரிக்க ராணுவத்தின் அதிநவீன ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில், அமெரிக்க ராணுவத்திற்குச் சொந்தமான AH-64 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் ஒன்று ஓமன் கடற்கரை மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி (அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அந்த ஹெலிகாப்டர் திடீரெனக் கடலில் விழுந்தது.
இந்தச் சம்பவம் குறித்து ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "ஈரான் படைகள் நமது அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியுள்ளன. இதில் இருந்த இரண்டு விமானிகளும் காயமின்றி உயிர் தப்பினர். இருப்பினும், இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டிப்பாகப் பதிலடி கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ராணுவம்
அதிபர் டிரம்ப் இது ஒரு தாக்குதல் என்று கூறினாலும், அமெரிக்க ராணுவம் இன்னும் அதை உறுதிப்படுத்தவில்லை. ஹெலிகாப்டர் விழுந்ததை உறுதி செய்த ராணுவம், அதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட வீரர்கள் இருவரும் நிலையாத இருப்பதாகவும் அவர்களுக்குப் பெரியளவில் காயம் இல்லை என்றும் ராணுவம் கூறியுள்ளது.
ஆளில்லா படகு
இந்த விபத்தில் ஒரு முக்கியமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது கடலில் விழுந்த இரண்டு விமானிகளையும் மீட்க அமெரிக்க ராணுவம் முதன்முறையாக ஒரு ஆளில்லா தானியங்கி படகைப் பயன்படுத்தியது. 24 அடி நீளம் கொண்ட கோர்செய்ர் (Corsair) என்பது ஒரு தானியங்கி படகாகும். இது மனிதர்கள் இல்லாமலேயே இயங்கும் திறன் கொண்டது. இந்த ஆளில்லா படகு கடலில் தத்தளித்த வீரர்களைக் கண்டுபிடித்து மீட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஏஐ தொழில்நுட்பங்களை ராணுவத்தில் இணைக்கும் அமெரிக்காவின் 'டாஸ்க் ஃபோர்ஸ் 59' திட்டத்தின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.
அப்பாச்சி ஹெலிகாப்டர்
அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் மிகவும் துல்லியமாகத் தாக்குதல் நடத்தக்கூடியவை. இவை பெரும்பாலும் எதிரிகளின் படகுகளைக் கண்காணிக்கவும், வான்வழிப் பாதுகாப்பு வழங்கவும் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, ஈரான் எல்லைப் பகுதிகளில் அமெரிக்கா இவற்றைத் தீவிரமாகப் பயன்படுத்தி வருகிறது. அது இப்போது விபத்தில் சிக்கியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஈரானுடனான மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க ராணுவம் கணிசமான இழப்புகளைச் சந்தித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ராணுவம் இதுவரை 5 போர் விமானங்கள், 7 எரிபொருள் நிரப்பும் விமானங்கள், 24க்கும் மேற்பட்ட ட்ரோன்களை அமெரிக்கா இழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இஸ்ரேல் - ஈரான் இடையில் திடீர் போர் நிறுத்தம்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிரடி அறிவிப்பு! -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
குட்டையை குழப்பிய இஸ்ரேல்.. செங்கடலில் உச்சக்கட்ட பதற்றம்! போர் இப்போதைக்கு முடியாது போல! -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
அவசரமாக தரையிறங்கிய ஜெட் விமானம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்! ஷாக் வீடியோ! -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி?












Click it and Unblock the Notifications