அமெரிக்காவில் நுழைய தடை.. பாலஸ்தீனம் உள்பட 7 நாடுகளை குறிவைத்து டிரம்ப் போட்ட அதிரடி உத்தரவு.பின்னணி
வாஷிங்டன்: பாதுகாப்பு காரணங்களுக்கான சிரியா, பாலஸ்தீனம் உள்பட 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ள நிலையில் அந்த நாடுகளின் பெயர்கள் மற்றும் தடையின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் உள்ளார். இந்நிலையில் தான் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய டிரம்ப் அதிரடியாக தடை விதித்து வருகிறார்.

அந்த வகையில் இதுவரை 30க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு டிரம்ப் தடை விதித்துள்ளார். அந்த வரிசையில் தற்போது 7 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அதன்படி புர்கினா பாஸோ, மாலி, நிகர், தெற்கு சூடான், சிரியா, பாலஸ்தீனம், லாஸ், சியாரா லியான் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் 2026 ஜனவரி 1ம் தேதி முதல் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டின் பாதுகாப்பு, மக்கள் பாதுகாப்பு, ஆவணங்களை சரிபார்ப்பதில் முறையில் அலட்சியம் காட்டுவது, அமெரிக்காவுக்கு வந்த பிறகு விசா காலம் முடிந்த பிறகும் தங்குவது உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு டிரம்ப் தடை விதித்து வருகிறார். அந்த வகையில் தற்போது 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு தடை போடப்பட்டுள்ளது.
இதில் பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் காசாவில் பயங்கரவாத குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். இந்த பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக இஸ்ரேல் போர் புரிந்தது. இதற்கு அமெரிக்கா சப்போர்ட் செய்தது. இதனால் அந்த பயங்கரவாத குழுவை சேர்ந்தவர்களால் நாட்டுக்கு ஆபத்து வரலாம் என்று கருதி பாலஸ்தீன அதிகாரிகள் கொடுக்கும் பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்போருக்கும் அமெரிக்காவில் நுழைய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் லாஸ் மற்றும் சியாரா லியான் உள்ளிட்ட நாடுகளை ஏற்கனவே அமெரிக்காவின் பாதியளவுக்கான கட்டுப்பாட்டு லிஸ்ட்டில் இருந்தது. தற்போது அந்த இருநாடுகளை சேர்ந்தவர்களும் அமெரிக்காவில் நுழை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ஆப்கானிஸ்தான், பர்மா, சாத், காங்கோ, ஈக்குவடாரியல் கயானா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி!












Click it and Unblock the Notifications