பிரிக்ஸ் அடித்த அடி.. அப்படியே சரிந்த அமெரிக்க டாலர்! IMF வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்
வாஷிங்டன்: சர்வதேச நாணய நிதியத்தின் 2025ம் ஆண்டின் 2ம் காலாண்டின் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இதில் அமெரிக்க டாலரை பல நாடுகள் இருப்பு வைப்பதை தவிர்த்துவிட்டன என்று தெரிய வந்திருக்கிறது. அதாவது உலக நாடுகள் அமெரிக்க டாலரை நம்புவதை கைவிட்டுவிட்டது. இதற்கு பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சிதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
IMF COFER தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் டாலரின் பங்கு வெறும் 56.32% ஆகக் குறைந்துள்ளது. இது 1995 ஆம் ஆண்டுக்குப் பிந்தைய மிகக் குறைந்த நிலையாகும். 2001 இல் 72% ஆக இருந்த உச்சநிலையில் இருந்து, கடந்த 20 ஆண்டுகளில் டாலர் சுமார் 16% புள்ளிகளை இழந்திருக்கிறது.

வேகமாக சரியும் அமெரிக்க ராஜ்ஜியம்
இந்த சரிவு வேகமாகி வருவதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் கூட்டாக சுமார் 12 டிரில்லியன் டாலர் அன்னியச் செலாவணி கையிருப்பை வைத்துள்ளன. உலக நாடுகள் வைத்திருக்கும் வெளிநாட்டு கரன்சிகளின் லிஸ்ட்டில் பல ஆண்டுகளாக அமெரிக்க கரன்சியான் டாலர்தான் முதலிடத்தில் இருந்தது. ஆனால், அந்த காலம் மெல்ல முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த மாற்றம் மெதுவானதாகவும், சீரற்றதாகவும், தரவுகளின்படி இதை மறுக்க முடியாதாகவும் இருக்கிறது.
தற்காலிக சரிவு அல்ல
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டின் 2ம் காலாண்டின் புள்ளிவிவரங்கள், டாலரின் பங்கு 56.32% ஆகக் குறைந்துள்ளதைக் காட்டுகின்றன. இது 2020 இல் சுமார் 59% ஆகவும், 2005 இல் 66% ஆகவும் இருந்தது. இது ஒரு தற்காலிக சரிவு அல்ல, பல ஆண்டுகளாக நீடித்த சரிவாகும்.
தொடர் சரிவு
உலக நாடுகள், தாங்கள் வைத்திருக்கும் அமெரிக்க டாலரை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வந்திருக்கின்றன. இது நீண்டகாலமாக மெதுவாக நடந்து வருகிறது. இச்சரிவு இரவோடு இரவாக நடக்கவில்லை; 2001-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு வருடத்திற்கு சுமார் 0.6 சதவீதப் புள்ளிகள் என்ற சராசரி விகிதத்தில் தொடர்ந்து சரிய ஆரம்பித்தது.
சொந்த கரன்சி
இதற்கு சீனா காரணம் கிடையாது. மாறாக, ஆஸ்திரிரேலியா டாலர், கனடடிய டாலர், சுவிஸ் பிராங்க், தென்கொரியா வான் போன்ற கரன்சிகள் டாலரின் இடத்தை நிரப்பியுள்ளன. இதற்கு முக்கிய காரணம் பிரிக்ஸ்தான். பிரிக்ஸ் நாடுகள் சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்து வருகின்றன. இந்த நாடுகளுக்கு இடையே 60% வர்த்தகம் சொந்த கரன்சியில்தான் நடக்கிறது. இதை பார்த்த மேலை நாடுகள் சொந்த கரன்சியை பன்படுத்த தொடங்கியுள்ள. இது டாலரின் இடத்தை நிரப்பியுள்ளது.
தங்கம் வாங்கிய இந்தியா
இப்படி டாலர் சரிவதால், மற்ற நாடுகள் தங்கத்தில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளன. ரியாத், சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கத்தை அதிக அளவில் வாங்கி குவித்துள்ளன. உலக தங்கக் கவுன்சிலின் கூற்றுப்படி, உலக நாடுகளின் சென்டரல் பேங்குகள் வைத்திருக்கும் தங்கத்தின் அளவு மிக அதிகமாகி இருக்கிறது. சீனா, போலந்து, இந்தியா மற்றும் துருக்கி போன்ற நாடுகள் அதிக அளவில் தங்கம் வாங்கிருப்பது தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications