"Grok AI வைத்து ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா.." நீதிமன்ற வழக்கில் அம்பலமான உண்மை.. பகீர்
வாஷிங்டன்: எலான் மஸ்க்கின் ஏஐ நிறுவனமான xAI டேட்டா சென்டரால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பான சட்டப் போராட்டம், யாரும் எதிர்பார்க்காத ஒரு திடுக்கிடும் உண்மையை வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல் சிஸ்டம்களில் xAI நிறுவனத்தின் ஏஐ சாட்பாட்டான 'க்ரோக்' பயன்படுத்தப்படுவதாகவும், சமீபத்தில் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களின் போது இது பயன்படுத்தப்பட்டது என்றும் அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ என்று வந்துவிட்டது. மருத்துவம், சட்டம், பிஸ்னஸ் என எல்லா துறைகளிலும் ஏஐ வேகமாக ஊடுருவி வருகிறது. அதேபோல யாருமே எதிர்பார்க்காத வகையில் ராணுவத்திலும் கூட ஏஐ பயன்பாடு மெல்ல அதிகரித்தே வருகிறது. சத்தமின்றி ஏஐ டூல்களை ராணுவங்கள் பயன்படுத்தி வருகிறது.

அமெரிக்க அமைப்பு
அமெரிக்காவில் மக்களின் சிவில் உரிமைகளுக்காகப் போராடும் என்ஏஏசிபி (NAACP) என்ற அமைப்பு xAI நிறுவனத்திற்கு எதிராக ஒரு வழக்கைத் தொடர்ந்தது. அதாவது எலான் மஸ்க்கின் xAI நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதிகள் ஏதுமின்றி தனது பிரம்மாண்ட டேட்டா சென்டரில் ஏகப்பட்ட கேஸ் டர்பைன்களை கையாள்வதாகவும், இது சுத்தமான காற்றுச் சட்டத்தை மீறுவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், இவை பெரும்பாலும் கறுப்பின மக்கள் வாழும் பகுதிகளில் கடுமையான காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகிறது என்றும் அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கிற்குப் பதிலளிக்கும் வகையில், ஜூன் 15ம் தேதி அமெரிக்க நீதித்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்தான் இந்த ராணுவ ரகசியம் கசிந்துள்ளது. அதாவது சுற்றுச்சூழல் அமைப்புகளின் அழுத்தத்தைக் கேட்டு இந்த டேட்டா சென்டர்கள் டர்பைன்களை நிறுத்தினால், அது xAI நிறுவனத்தின் ஏஐ அமைப்புகளை இயக்கும் மின்சார விநியோகத்தைப் பாதிக்கும் என்று அமெரிக்க பெடரல் அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.
டேட்டா சென்டர்
மேலும், இந்த டேட்டா சென்டர் வெறுமனே வணிக ரீதியானது அல்ல.. மாறாக இது அமெரிக்க நாட்டின் பரந்த பாதுகாப்பு நலன்களோடு தொடர்புடையது என்பதை நிரூபிக்க அவர்கள் முயன்றனர். இந்த செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்கு நேரடியாக உதவுகிறது என்றும் எனவே இதை மூடுவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறும் என்றும் அமெரிக்க அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
அமெரிக்க நீதித்துறை தாக்கல் செய்த இந்த வாதத்தை வலுப்படுத்தும் வகையில் பென்டகனின் ஏஐ பிரிவின் தலைவரான கேமரூன் ஸ்டான்லியின் வாக்குமூலமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அவர் அளித்த வாக்குமூலத்தில், அமெரிக்க ராணுவத்தின் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இலக்கு கண்டறியும் புராஜெக்ட் மேவன் (Project Maven) திட்டத்தில் க்ரோக் ஏஐ பயன்படுத்தப்பட்டு வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க ராணுவம்
குறிப்பாகச் சமீபத்தில் ஈரானில் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க ராணுவ நடவடிக்கையின் போது, மிகக் குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறிந்து தாக்குவதற்கு இந்த க்ரோக் ஏஐ தொழில்நுட்பம் அமெரிக்கப் படைகளுக்கு உதவியதாக அந்த மனுவில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே இப்போது மிகப் பெரிய விவாதமாக மாறியுள்ளது. அமெரிக்க ராணுவம் எந்தளவுக்கு ஏஐ டூல்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டது என்பதையே இது காட்டுவதாக உள்ளது. ராணுவத்தின் தாக்குதல் மற்றும் முடிவெடுக்கும் திறன்களில் ஏஐ தொழில்நுட்பங்களை பென்டகன் எந்த அளவுக்குச் சார்ந்துள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
ஏஐ நிறுவனங்களைப் பொறுத்தவரை க்ளாட் ஏஐ டூலை உருவாக்கிய ஆந்த்ரோபிக் மட்டுமே ராணுவப் பயன்பாட்டிற்குத் தங்கள் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று தடை வித்துள்ளது. இதனால் அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தங்களை ரத்து செய்த பென்டகன், அதற்குப் பதிலாக, தற்போது கூகுள், ஓபன்ஏஐ மற்றும் எக்ஸ்ஏஐ போன்ற முன்னணி நிறுவனங்களுடன் தனது சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள். இந்த வழக்கில் அளிக்கப்பட்ட வாக்குமூலமும் அதை உறுதி செய்யும் விதமாகவே இருக்கிறது.
ஆபத்து எங்கே?
ஏஐ டூல்களை ராணுவம் பயன்படுத்தி பிரச்சினை கொடுப்பவர்களை எளிதாகத் தாக்கி அளிப்பது நல்ல விஷயம் தான். ஆனால், இதே தொழில்நுட்பம் தீவிரவாதிகள் கைகளுக்கும் சென்றால் மிக மோசமான பேரழிவு ஏற்படும் ஆபத்தும் இருப்பதைப் பலரும் எச்சரிக்கிறார்கள். ஏஐ என்பதும் இரு பக்கமும் கூர்மையாக இருக்கும் கத்தியைப் போன்றது தான் என்பதால் நாம் கவனமாகவே இருக்க வேண்டும்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications