Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேரழிவு ஏவுகணையை சோதித்த அமெரிக்கா.. உலகின் எந்த பகுதியையும் தாக்கும்.. ஈரான் போருக்கு இடையே சம்பவம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகின் எந்த மூலைக்கும் சென்று தாக்கும் டூம்ஸ்டே ஏவுகணையை சோதித்து பார்த்துள்ளது அமெரிக்கா.. ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் 6வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணையை அமெரிக்கா சோதனை செய்திருப்பது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரானுக்கும் - அமெரிக்காவுக்கும் இடையே மோதல் உச்சத்தை தொட்டுள்ளது. ஈரானுக்கு சொந்தமான போர்க்கப்பலை அமெரிக்கா நீர்மூழ்கி இந்திய பெருங்கடலில் தாக்கி அழித்தது.

US Tests Intercontinental Doomsday Missile Amid Escalating Iran War Tensions

மறைமுகமாக உதவும் சீனா

இந்த தாக்குதலில் 83 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட நிலையில், அமெரிக்கா இந்த செயலுக்கு வருந்த வேண்டிய நிலை ஏற்படும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர் 6-வது நாளாக தீவிரம் அடைந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயரப்போகிறதா? எத்தனை நாள் இருப்பு இந்தியாவிடம் உள்ளது? விளக்கம்
பெட்ரோல், டீசல் விலை உயரப்போகிறதா? எத்தனை நாள் இருப்பு இந்தியாவிடம் உள்ளது? விளக்கம்

பதிலுக்கு ஈரானும் வளைகுடா நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஏவுகணைகள், டிரோன்களை கொண்டு சரமாரியாக அட்டாக் செய்து வருகிறது. போரில் ஈரான் அதி நவீன கிளஸ்டர் குண்டுகளையும் பயன்படுத்துவதால், சீனா மறைமுக உதவி செய்து இருக்கலாம் என்ற சந்தேகமும் பாதுகாப்பு நிபுணர்கள் மத்தியில் எழுப்பப்படுகிறது.

டூம்ஸ்டே ஏவுகணையை சோதிக்கும் அமெரிக்கா

போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா தனது பேரழிவு ஏவுகணையை சோதித்து பார்த்துள்ளது. டூம்ஸ்டே ஏவுகணை என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணையை வைத்து உலகின் எந்த மூலையையும் தாக்க முடியும். கடந்த மார்ச் 3-ஆம் தேதி கலிபோர்னியாவில் உள்ள தளத்தில் இருந்து இந்த சொதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்ட சோதனை எனவும், தற்போதைய சூழலுக்கான பதிலடி நடவடிக்கை இல்லை என்றும் விமானப்படை குளோபல் ஸ்டிரைக் தளபதி கூறியுள்ளார். ஆனாலும் அமெரிக்கா இதனை சோதித்து பார்த்துள்ள கால கட்டம் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.

உலகின் எந்த மூலைக்கும் சென்று தாக்கும்

13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணை உலகின் எந்த மூலையையும் தாக்கும் திறன் கொண்டது. அணு ஆயுதங்களை சுமந்து சென்று கண்டம் விட்டு கண்டம் பாயும் சக்தி கொண்டதாகும்.

3-ஆம் உலகப்போர் அச்சுறுத்தல்.. மக்களுக்கு பாதுகாப்பான 10 நாடுகள்.. எது தெரியுமா?
3-ஆம் உலகப்போர் அச்சுறுத்தல்.. மக்களுக்கு பாதுகாப்பான 10 நாடுகள்.. எது தெரியுமா?

இது அமெரிக்காவின் நிலையான சிலோ (silo) தளங்களில் இருந்து ஏவப்படும், நகர்த்த முடியாத (non-mobile), தரை தள அடிப்படையிலான அணு ஆயுத திறன் கொண்ட ஒரே பாலிஸ்டிக் ஏவுகணையாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+