நிறவெறி, இனவெறிக்கு எதிரான வலிமையான குரல்.. அன்பை விதைக்கும் அதிபர் பிடனின் முதல் உரை.. அசத்தல்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற ஜோ பிடன் தனது முதல் உரையில் நிறவெறிக்கும், இனவெறிக்கு எதிராக பேசியுள்ளார். மக்கள் அன்பையும், ஒற்றுமையையும் கடைபிடிக்க வேண்டும் என்று பிடன் பேசியுள்ளார்.
Recommended Video
அமெரிக்காவில் புதிய அதிபர் பிடன் பதவி ஏற்பதற்கான விழா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியாசு கட்சி வேட்பாளர் டிரம்ப்பை வீழ்த்து தேர்தலில் வென்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் இன்று அமெரிக்க அதிபராக பதவி ஏற்று உள்ளார்.
இந்த பதவி ஏற்பு விழா தற்போது நடந்து வருகிறது. அதிபர் டிரம்ப் ஏற்கனவே வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிவிட்டதால் அவர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.

பேச்சு
அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பிடன் மிகவும் வலிமையான உரையை இன்று நிகழ்த்தினார். பிடன் தனது பேச்சில் ஒற்றுமை குறித்தும், நிறவெறிக்கு எதிராகவும், கொரோனா குறித்தும், அமெரிக்க பாதுகாப்பு குறித்தும் பேசினார். பிடன் தனது உரையில், அமெரிக்காவின் நாள் இது.. ஜனநாயகத்துக்கான நாள் இது. அமெரிக்கா பல சவால்களை கடந்து வந்துள்ளது.

போர்கள்
பல போர்களை, மோதல்களை அமெரிக்க சந்தித்துள்ளது. ஆனால் அனைத்தில் இருந்தும் அமெரிக்கா மீண்டு வந்துள்ளது. 100 ஆண்டுகளுக்குப் பின் கொரோனா எனும் பெருந்தொற்று அமெரிக்காவை தாக்கி உள்ளது. கொரோனா பெருந்தொற்றால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

நீதி
அமெரிக்காவில் அனைவருக்குமான சமமான நீதி என்பதை தாமதப்படுத்தமாட்டோம். அரசியல் தீவிரவாதம், வெள்ளை இனவாதம் உள்ளிட்டவற்றை தூக்கி எறிய வேண்டிய தேவை உள்ளது. மக்கள் ஒற்றுமையாக இணைய வேண்டிய நேரம் இது. நிற வெறிக்கும், இன வெறிக்கும் எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும்.

மோதல்கள்
9/11 தொடங்கி சிவில் வார் வரை அனைத்தையும் பார்த்து, அனைத்தும் கடந்து அமெரிக்கா உயர்ந்து நிற்கிறது. அமெரிக்காவில் ஆட்சி மாற்றங்கள் அமைதியாக நடந்தன.. ஆனால் சில நாட்களுக்கு முன்னர் வன்முறை இங்கு நிகழ்ந்தது. இந்த மோதல்களையும் அமெரிக்கா கடந்து வரும். மக்கள் ஒன்றாக இணையும் காலம் வரும்.

ஒற்றுமை
மக்கள் இடையே அன்பு பெருகும் காலம் வரும். அமெரிக்கர்களாகிய நாம் ஒன்றிணைந்து அனைத்து தீவிரவாதங்களையும் முறியடிக்க வேண்டும். அமெரிக்காவை தோல்வி அடைய நான் விட மாட்டேன். நாம் ஒன்றாக இணைந்து அமெரிக்காவிற்காக புதிய பயணத்தை தொடங்க வேண்டும், என்று ஜோ பைடன் தனது உரையில் குறிப்பிட்டார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications