உலகின் 2 பெரும் தலைகள் இன்று மீட்டிங்.. அமெரிக்க அதிபருடன் - சீன அதிபர் டின்னர்! பிளான் என்ன?
வாஷிங்டன்: உலகின் 2 பெரும் துருவங்களாக திகழ்ந்து வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இன்று அபெக் உச்சி மாநாட்டில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்கள்.
உலகின் 2 பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் எதிரும் புதிருமான நிலையில் உள்ளன. வெளியுறவு ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் இரு நாடுகளிலிடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. அமெரிக்காவுக்கே போட்டிபோடும் வகையில் தொழில்நுட்பம், மென்பொருள் உற்பத்தி, வேளாண் உற்பத்தி, எலெக்டிரானிக்ஸ், ஆட்டோமொபைல் என அனைத்து துறைகளிலும் சீனா சிறந்து விளங்கி வருகிறது. சர்வதேச விவகாரங்கள், உக்ரைன் - ரஷியா போர், பாலஸ்தீன் - இஸ்ரேல் போர்களில் இரு நாடுகளும் எதிரெதிர் நிலைபாட்டில் உள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் அபெக் எனப்படும் ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மையம் சார்பில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று அமெரிக்கா புறப்பட்டார். சீன தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து தனி விமானம் மூலமாக சான் பிரான்சிஸ்கோ நகருக்கு அவர் புறப்பட்டு சென்றார். அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, ஜி ஜின்பிங் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இன்று இரவு ஏபெக் சார்பில் நடைபெற தொழிலதிபர்கள் உடனான இரவு விருந்தில் இருவரும் பங்கேற்க உள்ளார்கள்.
அப்போது சீன அதிபருடன் அமெரிக்க தொழிலதிபர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்த போட்டி, மோதல் காரணமாக சர்வதேச வர்த்தகத்தில் உள்ள பிரச்சனைகள், சவால்கள், ஏற்றுமதி, இறக்குமதியில் உள்ள சிக்கல்கள், பொருளாதார மந்த நிலை குறித்து தொழிலதிபர்கள் சீன அதிபரிடம் முறையிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான சந்திப்பு இரு நாட்டு உறவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இரு நாடுகள் ஒருவர் மீது ஒருவர் விதித்து இருக்கும் பொருளாதார தடைகள், தைவான் பிரச்சனை, சர்வதேச விவகாரங்களில் உள்ள முரண்பாடுகள், வர்த்தக ஒப்பந்தங்கள், சீன உளவு பலூன் சர்ச்சை விவகாரம், ரஷியா - உக்ரைன், பாலஸ்தீன் - இஸ்ரேல் போர்கள் தொடர்பாக இரு தலைவர்களும் விவாதிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் அமெரிக்கா, சீனாவின் முக்கிய அதிகாரிகளும் கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications