அணு ஆயுத முப்படைகளை கட்டமைக்கும் சீனா... உலகப் போருக்கு தயாராகிறதா? அதிர்ச்சி தரும் யு.எஸ். அறிக்கை
வாஷிங்டன்: சீனா அணு ஆயுத முப்படைகளை அதிவேகமாக கட்டமைத்து வருவதாக அமெரிக்காவின் ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
Recommended Video
சீனாவின் ராணுவ வலிமை தொடர்பான ஆய்வறிக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையில் லடாக் எல்லையில் இந்திய ராணுவத்துடனான சீனாவின் மோதல் போக்கு, அமெரிக்கா-இந்தியா உறவை சீர்குலைக்கும் சீனாவின் போக்கு, சீனாவின் அணு ஆயுத பெருக்கம் ஆகியவை குறித்து விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடனான எல்லை மோதல்
இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: 2020-ம் ஆண்டு மே மாதத்தின் தொடக்கத்தில் இந்திய கட்டுப்பாட்டு எல்லைப் பகுதிக்குள் சீனாவின் ஊடுருவல் தொடங்கியது. அப்போது இந்தியா, சீனா ராணுவத்தினர் இடையே பல இடங்களில் கைகலப்புகள் நிகழ்ந்தன. இமயமலை பகுதியில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை சீனா கட்டமைத்திருக்கிறது.

இந்திய எல்லையில் சீனாவின் கிராமங்கள்
திபெத் சுயாட்சி பிரதேசம், இந்தியாவின் அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா புதிய பொதுமக்கள் குடியிருப்பை கட்டமைத்திருக்கிறது. எல்லை கடந்த ஊடுருவல் நடவடிக்கைகளுக்காக இந்த கட்டமைப்பை சீனா உருவாக்கியது. இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் சீனாவின் ஊடுருவல் நடவடிக்கைகள் அமைந்திருந்தன.

அணு ஆயுத குவிப்பில் சீனா
சீனாவைப் பொறுத்தவரையில் முப்படைகளையும் அணு ஆயுதமயமாக்கி உள்ளது. சீனாவிடம் தற்போதைய நிலையில் 200 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன. அடுத்த பத்தாண்டுகளில் இதனை இரு மடங்காக அதிகரிக்க சீனா திட்டமிட்டிருக்கிறது. சீனாவின் இந்த அணு ஆயுத விரிவாக்கம் சர்வதேச நாடுகளுக்கு கவலை தரக் கூடியதாகும். அடுத்த 10 ஆண்டுகளில் சீனாவின் அணு ஆயுதங்கள் எண்ணிக்கை 5 மடங்காக அதிகரிக்கும். காற்று, நிலம், கடல், விண்வெளி என அனைத்து நிலைகளிலும் அமெரிக்காவுக்கு சவால் விடுகிறது சீன ராணுவம். இவ்வாறு அமெரிக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவுடனான பேச்சுவார்த்தை
லடாக் எல்லை மோதலைத் தொடர்ந்து சீனாவுடன் 13 கட்டமாக இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவே இல்லை. அண்மையில் திடீரென எல்லை பாதுகாப்புக்கான சட்டத்தை சீனா நிறைவேற்றியது. சீனாவின் இத்தகைய இடைவிடாத நடவடிக்கைகளில் இந்தியாவுடனான எல்லைப் பகுதிகளில் தொடர்ச்சியான பதற்றத்தை உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications