அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் ஒருநாள் கொரோனா பாதிப்பு: 1,06,170 பேருக்கு தொற்று; 835 பேர் பலி
வாஷிங்டன்: உலக நாடுகளில் அமெரிக்காவில் அதிஉச்சமாக கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. அமெரிக்காவில் ஒரே நாளில் 1,06,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் ஒரே நாளில் 835 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,92,99,560 ஆக அதிகரித்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 43,93,243 ஆக உள்ளது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18,76,04,419.
அனைத்து நாடுகளிலும் நேற்று ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 6,09,073. ஒருநாள் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 9,674. உலக நாடுகளில் நேற்று கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 5,58,413.

அமெரிக்காவில் அதிக பாதிப்பு
உலக நாடுகளில் நேற்று அதிகமான கொரோனா பாதிப்பு அமெரிக்காவில்தான் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நேற்று மட்டும் 1,06,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நேற்று 38,696 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். அமெரிக்காவில் நேற்று கொரோனாவுக்கு 835 பேர் மரணம் அடைந்தனர்.

2-வது இடத்தில் ஈரான்
கொரோனா பாதிப்பில் ஈரான் 2-வது இடத்தில் இருக்கிறது. ஈரானில் நேற்று மட்டும் 50,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 29,331 பேர் கொரோனா பிடியில் இருந்து மீண்டனர். ஈரானில் கொரோனாவால் நேற்று மட்டும் 625 பேர் உயிரிழந்தனர். உலக நாடுகளிலேயே இந்தோனேசியா, பிரேசிலில் கொரோனா மரணங்கள் மிக அதிகமாக உள்ளன. பிரேசிலில் நேற்று மட்டும் 1,017 பேர் கொரோனாவால் மாண்டனர். பிரேசிலில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,197.

பிரேசிலில் மரணங்கள் அதிகரிப்பு
பிரேசிலை தொடர்ந்து கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா 4-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் நேற்று 35,201 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது; மேலும் 440 பேர் உயிரிழந்தனர். முந்தைய நாள் பாதிப்பை விட இந்தியாவில் இது அதிகமாகும். இந்தியாவில் நேற்று 37,145 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்.
Recommended Video

இந்தோனேசியாவில் 1180 பேர் பலி
இந்தோனேசியா, ரஷ்யாவில் கொரோனா மரணங்கள் அதிகமாக உள்ளன. இந்தோனேசியாவில் நேற்று மட்டும் 1,180 பேரும் ரஷ்யாவில் நேற்று 805 பேரும் கொரோனாவால் உயிரிழந்தனர். தென்னாப்பிரிக்காவில் 553 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர். பிரான்ஸ், இங்கிலாந்து, துருக்கி ஆகிய நாடுகளில் ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை முறையே 28,114, 26,852 மற்றும் 21,692 என பதிவாகி உள்ளது.
-
“எங்கள் கைதியாக இருப்பதே உங்க பையனுக்கு பாதுகாப்பு!” அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் மெசேஜ் -
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
ஈரான் கண்ணில் மண்ணை தூவிய அமெரிக்கா.. டீப் பகுதிக்குள் சென்று வீரரை மீட்டது எப்படி? ஹாலிவுட் படத்தை மிஞ்சும் சம்பவம் -
விடிய விடிய தேடுதல்.. ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஜெட் விமானத்தின் பைலைட் மீட்பு! அமெரிக்கா நிம்மதி -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
7 போர் விமானங்களை இழந்த அமெரிக்கா.. ஈரான் உடனான சண்டையில் மொத்தமா போச்சு! -
அமெரிக்காவுக்கு அடிமேல் அடி! சக்தி வாய்ந்த போர் விமானத்திற்கு நேர்ந்த கதி.. கெத்து காட்டும் ஈரான்! -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
ஹார்முஸ் ஜலசந்தியில் நிற்கும் 3200 எண்ணெய் கப்பல்கள்.. 20 ஆயிரம் பணியாளர்கள் குடிநீர் இல்லாமல் அவதி -
இந்தியாவுக்கு வர வேண்டிய ஈரான் எண்ணெய் கப்பல்.. சீனாவுக்கு திடீர் யூ-டர்ன்.. நடந்தது என்ன? -
கண்கள் சிவந்த டிரம்ப்.. அமெரிக்க ராணுவ தளபதி அதிரடியாக நீக்கம்! ஈரான் போரில் தடுமாறுவது தான் காரணம்?












Click it and Unblock the Notifications