கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவுக்கு சொந்தமானது அருணாசலப் பிரதேசம்.. சீனாவுக்கு ஷாக் கொடுத்த அமெரிக்கா!
வாஷிங்டன்: இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லையில் பதற்றம் நீடித்து வருகையில், அருணாசலப் பிரதேசம் கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவின் பகுதியாக இருந்து வருகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்திய, சீன எல்லை விவகாரம் குறித்து அமெரிக்க உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவரிடம் இதுதொடர்பான கேள்வி கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கேட்கப்பட்டது.

சிக்கல்
அப்போது, ''இந்திய, சீன எல்லை விவகாரத்தில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவின் பகுதியாக அருணாசலப் பிரதேசம் இருந்து வருகிறது. இந்தப் பிரச்சனை மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. ராஜாங்க ரீதியில் இந்த சிக்கலை தீர்த்துக் கொள்ள வேண்டும்.

ஊடுருவல்
அதேசமயம் சர்வதேச எல்லைக் கட்டுப்பாடு கோடு விவகாரத்தில் ஒருதலைபட்சமான முடிவை எடுப்பதற்கு வாஷிங்டன் விரும்பவில்லை. ராணுவ அல்லது மக்கள் ஊடுருவல் மூலம் எல்லையை மாற்றி அமைத்துக் கொள்வதை கடுமையாக நாங்கள் எதிர்க்கிறோம்.

எல்லை விவகாரம்
இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் மூலம் இந்தியாவும், சீனாவும் எல்லை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். ஆனால், ராணுவ பலத்தை இருதரப்பிலும் பயன்படுத்தக் கூடாது. இருநாடுகளுக்கும் இடையிலான எல்லை விவகாரத்தை கவனமாக கூர்ந்து கவனித்து வருகிறோம். முன்பும் இருதரப்பிலும் ராஜாங்க ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றுதான் கூறி வந்தோம். இப்போதும் அதைத்தான் கூறுகிறோம்'' என்றார்.

அருணாசலப் பிரதேசம்
சமீபத்தில் சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவ் லிஜியன் அளித்தி இருந்த பேட்டியில், ''அருணாசலப் பிரதேசம் சீனாவின் தெற்கு திபெத்துக்கு சொந்தமானது என்று குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்தே அமெரிக்கா இந்த விஷயத்தில் தனது கருத்தை வெளியிட்டுள்ளது.

கட்டிடங்கள்
இதுமட்டுமில்லை, இந்தியாவின் ஒரு பகுதியாக, ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்து வரும் லடாக் பகுதியையும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்து இருந்த சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் அளித்திருந்த பேட்டியில், ''லடாக்கை யூனியன் பிரதேசமாக இந்தியா அங்கீகரித்து இருப்பதையும், அங்கு சட்டத்திற்கு விரோதமாக கட்டிடங்கள் கட்டுவதையும் நாங்கள் அங்கீகரிக்கவில்லை'' என்று தெரிவித்து இருந்தார்.

மறுப்பு
சீனா சட்டத்திற்கு விரோதாமாக லடாக்கை யூனியன் பிரதேசமாக அங்கீகரித்து இருப்பதாக சீனா தெரிவித்து இருந்தது. இதை இந்தியா ஏற்றுக் கொள்ளவில்லை. 1959ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட எல்லையை தாங்கள் மதிப்பதாக சீனா தெரிவித்து இருந்தது. இதற்கும் இந்தியா கண்டனம் தெரிவித்து இருந்தது. இதை இந்தியா மறுத்து இருந்தது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications