கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவுக்கு சொந்தமானது அருணாசலப் பிரதேசம்.. சீனாவுக்கு ஷாக் கொடுத்த அமெரிக்கா!
வாஷிங்டன்: இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லையில் பதற்றம் நீடித்து வருகையில், அருணாசலப் பிரதேசம் கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவின் பகுதியாக இருந்து வருகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்திய, சீன எல்லை விவகாரம் குறித்து அமெரிக்க உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவரிடம் இதுதொடர்பான கேள்வி கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கேட்கப்பட்டது.

சிக்கல்
அப்போது, ''இந்திய, சீன எல்லை விவகாரத்தில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவின் பகுதியாக அருணாசலப் பிரதேசம் இருந்து வருகிறது. இந்தப் பிரச்சனை மிகவும் முக்கியமானதாக இருந்து வருகிறது. ராஜாங்க ரீதியில் இந்த சிக்கலை தீர்த்துக் கொள்ள வேண்டும்.

ஊடுருவல்
அதேசமயம் சர்வதேச எல்லைக் கட்டுப்பாடு கோடு விவகாரத்தில் ஒருதலைபட்சமான முடிவை எடுப்பதற்கு வாஷிங்டன் விரும்பவில்லை. ராணுவ அல்லது மக்கள் ஊடுருவல் மூலம் எல்லையை மாற்றி அமைத்துக் கொள்வதை கடுமையாக நாங்கள் எதிர்க்கிறோம்.

எல்லை விவகாரம்
இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் மூலம் இந்தியாவும், சீனாவும் எல்லை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். ஆனால், ராணுவ பலத்தை இருதரப்பிலும் பயன்படுத்தக் கூடாது. இருநாடுகளுக்கும் இடையிலான எல்லை விவகாரத்தை கவனமாக கூர்ந்து கவனித்து வருகிறோம். முன்பும் இருதரப்பிலும் ராஜாங்க ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றுதான் கூறி வந்தோம். இப்போதும் அதைத்தான் கூறுகிறோம்'' என்றார்.

அருணாசலப் பிரதேசம்
சமீபத்தில் சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவ் லிஜியன் அளித்தி இருந்த பேட்டியில், ''அருணாசலப் பிரதேசம் சீனாவின் தெற்கு திபெத்துக்கு சொந்தமானது என்று குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்தே அமெரிக்கா இந்த விஷயத்தில் தனது கருத்தை வெளியிட்டுள்ளது.

கட்டிடங்கள்
இதுமட்டுமில்லை, இந்தியாவின் ஒரு பகுதியாக, ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்து வரும் லடாக் பகுதியையும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்து இருந்த சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் அளித்திருந்த பேட்டியில், ''லடாக்கை யூனியன் பிரதேசமாக இந்தியா அங்கீகரித்து இருப்பதையும், அங்கு சட்டத்திற்கு விரோதமாக கட்டிடங்கள் கட்டுவதையும் நாங்கள் அங்கீகரிக்கவில்லை'' என்று தெரிவித்து இருந்தார்.

மறுப்பு
சீனா சட்டத்திற்கு விரோதாமாக லடாக்கை யூனியன் பிரதேசமாக அங்கீகரித்து இருப்பதாக சீனா தெரிவித்து இருந்தது. இதை இந்தியா ஏற்றுக் கொள்ளவில்லை. 1959ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட எல்லையை தாங்கள் மதிப்பதாக சீனா தெரிவித்து இருந்தது. இதற்கும் இந்தியா கண்டனம் தெரிவித்து இருந்தது. இதை இந்தியா மறுத்து இருந்தது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications