டிக் டாக் செயலிக்கு தடை உறுதி.. எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்தது அமெரிக்கா சுப்ரீம் கோர்ட்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் காரணமாக, டிக் டாக் செயலி நாளை முதல் அமெரிக்காவில் தடை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
டிக் டாக் செயலியில் பதிவு செய்யப்படும் தகவல்கள் சீன அரசுடன் பகிரப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு, அமெரிக்க அரசு டிக் டாக் செயலிக்கு தடை விதித்தது. மேலும், டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்தால் மட்டுமே தடை நீக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

டிக் டாக் எனப்படும் மொபைல் போன் செயலி உலகளவில் மிகவும் பிரபலமாக இருந்தது. இசை, நடனம், நடிப்பு என பல்வேறு திறமைகளை வெளிக்காட்டும் தளமாக இது இருப்பதால் வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர். சீனாவைச் சேர்ந்த ' பைட் டான்ஸ்' என்ற நிறுவனம் இந்த செயலியை நிர்வகித்து வருகிறது.
டிக்டாக் மற்றும் அதன் தாய் நிறுவனமான Byte Dance குறித்து சட்ட மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் அதிக கவலை தெரிவித்தனர். டிக்டாக் மற்றும் பைட் டான்ஸ், இருப்பிடத் தகவல் போன்ற முக்கியமான பயனர் தகவல்களை சீன அரசாங்கத்திடம் கொடுக்கும் அச்சம் இருப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர். இருப்பினும் டிக்டாக் நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை தொடக்கத்தில் இருந்தே மறுத்து வருகிறது.
இந்தியா கடந்த 2020 ஆம் ஆண்டு டிக்டாக் செயலியை தடை செய்தது. சீனாவுக்குச் சொந்தமான டிக்டாக் செயலி உள்பட 59 செயலிகளை பயனர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி தடை செய்தது. மேலும் பயனர்களின் டேட்டாவை இந்தியாவுக்கு வெளியே உள்ள சர்வர்களுக்கு அனுப்புவதாகவும் குற்றஞ்சாட்டி செயலிகளுக்கு தடை விதித்தது.
கடந்த ஆண்டு நவம்பர் முதல் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் அரசு வழங்கிய சாதனங்களில் டிக்டாக் தடை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் டிக் டாக் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை இந்த வார இறுதியில் அமலுக்கு வருகிறது. , டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்தால் மட்டுமே தடை நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்போவதில்லை என்று டிக் டாக் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதையடுத்து, டிக் டாக் தடை உறுதி என அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் டிக் டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
டிக் டாக் நிறுவனம் தொடர்ந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இது குறித்து கொண்டு வரப்பட்ட சட்டமானது, பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பை மீறவில்லை எனக்கூறியுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications