விடமாட்டேன்.. கதறிய டிரம்புக்கு மீண்டும் ஜெர்க்.. பிடன் வெற்றியை எதிர்த்து தொடுத்த கேஸ்கள் தள்ளுபடி
டிரம்புக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது
வாஷிங்டன்: மறுபடியும் மறுபடியும் "பன்" வாங்கி கொண்டுள்ளார் டிரம்ப்.. டெக்சாஸ் உள்பட 17 மாநிலங்களில் ஜோபிடன் வெற்றியை எதிர்த்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட் ஒரேடியாக தள்ளுபடி செய்துவிட்டது.. இதுதான் டிரம்புக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
அதிபர் தேர்தலில் தான்தான் வெற்றி பெறுவேன் என்று கடைசி நேரம் வரை உறுதியுடன் நம்பி கொண்டிருந்தார் டிரம்ப்.. அதனால்தான், ஜோபிடனின் பிரச்சாரத்தைகூட, ஒரு பொருட்டாகவே அவர் மதிக்கவில்லை.. அவரை விமர்சனம்கூட செய்யாமல், தன் புராணத்தையே புகழ்பாடி கொண்டிருந்தார் டிரம்ப்.
இந்த அதீத அலட்சியத்தினால், ஜனநாயககட்சி சார்பில் போட்டியிட்ட ஜோபிடன் அமோக வெற்றி பெற்று விட்டார்.. ஆனாலும் இந்த வெற்றியை டிரம்ப்பால் ஜீரணிக்கவே முடியவில்லை.. தோல்வியை ஏற்கவும் முடியவில்லை.. தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக சொன்னார்.. இந்த வெற்றியை எதிர்த்து கோர்ட்டுக்கு போக போகிறேன் என்று ஆவேசமாக கர்ஜித்தார்.
அமெரிக்காவில் 24 மணி நேரத்துக்குள் கொரோனா வாக்சின்... மாஸ் காட்டும் டிரம்ப்!
இறுதியில், அதன்படியே ஜோபிடன் வெற்றியை எதிர்த்து கோர்ட்டுகளில் டிரம்ப் தரப்பினர் வழக்குகளை தொடர்ந்தனர். இப்படித்தான், பென்சில்வேனியா மாநில தேர்தல் முடிவை எதிர்த்து சில நாட்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர, அது தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.. இப்போது டெக்சாஸ் உள்பட 17 மாநிலங்களிலும் தேர்தல் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக தள்ளுபடி செய்திருக்கிறது.
நடந்து முடிந்த தேர்தலில் முறைகேடு நடந்ததற்கான போதுமான ஆதாரங்கள் இல்லை என்று நீதிபதிகள் சொல்லிவிட்டனர்.. இப்படி தொடரப்படும் வழக்குகள் எல்லாம் ஒவ்வொன்றாக தள்ளுபடி செய்யப்பட்டு வருவது மேலும் மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.