Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனசாட்சி இடம் கொடுக்கல.. ஈரான் போரால் டிரம்புக்கு எகிறும் பிரஷர்.. அமெரிக்க டாப் அதிகாரி ரஜினாமா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஈரான் மீதான போரை மனசாட்சிப்படி ஆதரிக்க முடியாது என்று அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் தலைவர் ஜோஷப் கென்னட் அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அமெரிக்காவுக்கு உடனடியாக எந்த அச்சுறுத்தலும் ஈரானிடம் இருந்து இல்லை. இஸ்ரேல் அழுத்தத்தின் பேரிலேயே டிரம்ப் இந்த போரை தொடர்ந்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து தொடுத்துள்ள போர் இன்று 18-வது நாளாக நீடித்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், எண்ணைய் உள்கட்டமைப்புகளை ஈரான் தாக்கி வருகிறது.

US War Against Iran Cannot Be Supported on Grounds of Conscience Top Trump Official Resigns

டொனால்டு டிரம்ப் கோரிக்கை

அதேபோல ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. எரிபொருள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இது அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் பாதிக்கப்பட்ட நாடுகள், போர்க்கப்பலை அனுப்ப வேண்டும் என்று டிரம்ப் கோரிக்கை வைத்தார்.

ஆனால் டிரம்பின் இந்த கோரிக்கையை எந்த நாடும் ஏற்காததால் விரக்தி அடைந்தார். இதையடுத்து டிரம்ப் கூறுகையில், ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு விவகாரத்தில் எங்களுக்கு உதவ யாரும் தேவையில்லை. நாங்கள் உலகின் வலிமையான நாடு. உலகில் உள்ள நாடுகளிலேயே மிகவும் வலிமையான ராணுவத்தை நாங்கள் கொண்டுள்ளோம்.

பதவியை ராஜினாமா செய்தார்

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் உதவுவதற்கு உலக நாடுகள் போதிய ஆர்வம் காட்ட மறுக்கிறது. வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களால் நான் திடுக்கிட்டு போனேன். ஈரான் இவ்வளவு வலியமாக தாக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஈரான் தற்போது தனது ராணுவ வலிமையை இழந்து வருகிறது" என்று கூறினார்.

இது ஒருபக்கம் இருக்க, ஈரான் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு சொந்த நாட்டிலும் எதிர்ப்பை சந்தித்துள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் தலைவரான ஜோஷப் கெண்ட் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

மனசாட்சிப்படி ஆதரிக்க முடியாது

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் தொடுத்த விவகாரம் தொடர்பாக தனது பதவியை விட்டு விலகியுள்ளார் ஜோஷப் கென்னட். அமெரிக்காவுக்கு உடனடியாக எந்த அச்சுறுத்தலும் ஈரானிடம் இருந்து இல்லை. இஸ்ரேல் அழுத்தத்தின் பேரிலேயே டிரம்ப் இந்த போரை தொடர்ந்துள்ளார். ஈரான் மீதான போரை மனசாட்சிப்படி ஆதரிக்க முடியாது" என்று கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு மீது அமெரிக்கா போர் தொடுப்பது உயிர்களையும் அமெரிக்கவில் வளத்தையும்தான் வீணடிகும் என்று டிரம்புக்கு ஜூன் 2025 வரை தெரியும். இஸ்ரேலின் சீனியர் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க ஊடகங்களில் "செல்வாக்கு வாய்ந்த சிலர்" இணைந்து, "தவறான பிரசாரம் செய்து திட்டமிட்டு போர் ஆதரவு கருத்துகளை பரப்பி, ஈரானுக்கு எதிரான போரை தூண்ட முயன்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

டிரம்ப் சிந்தித்து பார்க்க வேண்டும்

நாம் ஈரானில் என்ன செய்கிறோம், அதை யாருக்காக செய்கிறோம் என்பதை டிரம்ப் சிந்தித்து பார்க்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இப்போது துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நீங்கள் இந்த பாதையை மாற்றி, நாட்டிற்கு ஒரு புதிய திசையை அமைக்கலாம். இல்லையெனில், நாம் மேலும் வீழ்ச்சிக்கும் குழப்பத்திற்கும் இழுக்கப்பட அனுமதிக்கலாம். முடிவெடுக்கும் அதிகாரம் உங்கள் கைகளில்தான் உள்ளது என்றும் ஜான் கென்னட் என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+