உலகின் முன்னணி சக்தியாக உருவெடுக்கும் இந்தியா.. சல்யூட் வைக்கும் அமெரிக்கா!
வாஷிங்டன்: உலகின் முன்னணி சக்தியாக இந்தியா உருவெடுப்பதை நாங்கள் வரவேற்கிறோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடனுடன் கடந்த திங்களன்று தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும், அதற்கு வெளியிலும், அமைதி மற்றும் பாதுகாப்பை மேற்கொள்வதற்கான நட்புறவை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தென் சீனக் கடல் முதல் இந்திய-சீனா எல்லை வரை சீனா ஆதிக்கம் செலுத்தி வருவது தொடர்பாகவும் பிரதமர் மோடி பேசினார்.
இந்நிலையில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எங்களின் மிக முக்கியமான கூட்டு நாடுகளில் ஒன்று இந்தியா என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தியாவை வரவேற்கிறோம்
இதுகுறித்து நேற்று (பிப்.9) அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா எங்களுக்கு மிக முக்கியமான நட்பு நாடுகளில் ஒன்றாகும். இந்தியா, ஒரு முன்னணி உலகளாவிய சக்தியாக உருவெடுப்பதையும், பிராந்தியத்தில் அந்நாடு வழங்கும் பாதுகாப்பையும் நாங்கள் வரவேற்கிறோம்" என்று தெரிவித்தார்.

பலதரப்பிலும் சப்போர்ட்
மேலும், "பாதுகாப்பு, இந்தோ-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, அமைதி காத்தல், சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி, தொழில்நுட்பம், விவசாயம், விண்வெளி மற்றும் சமுத்திரம் என்று பலதரப்பிலும் நாங்கள் இந்தியாவிற்கு ஒத்துழைப்போம்" என்றும் தெரிவித்துள்ளார்.

146 பில்லியன் டாலர்
நிரந்தரமற்ற உறுப்பினராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் (யு.என்.எஸ்.சி) இந்தியா நீடிப்பதை வரவேற்ற நெட் பிரைஸ், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக அமெரிக்கா உள்ளது என்றும், மொத்த இருதரப்பு வர்த்தகம் 2019 இல் 146 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்கா கவலை
அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சனையில் சீனா அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது கவலை தருகிறது. எப்போதும், எங்கள் நட்பு நாடுகளுடன் நாங்கள் துணை நிற்போம். இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனை விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நேரடி பேச்சுவார்த்தைக்கும் அமைதியான தீர்வு முறைக்கும் நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம்" என்றார்.
-
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே












Click it and Unblock the Notifications