'கவலை வேண்டாம்.. வெற்றி நமக்கு தான்..' 5 மாத அமைதிக்கு பிறகு.. திடீரென கிளம்பிய டிரம்ப்..முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு, பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிரம்ப், வரும் 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் வடக்கு கரோலினா மாகாணத்தில் குடியரசு கட்சி தான் வெல்லும் எனப் பேசியுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. அதில் போட்டியிட்ட டிரம்ப், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார்.

அமெரிக்க அதிபராக இருக்கும் ஒருவர் தேர்தலில் தோல்வியடைவது கடந்த 20 ஆண்டுகளில் இது தான் முதல்முறையாகும்.

நாடாளுமன்ற வன்முறை

நாடாளுமன்ற வன்முறை

இருப்பினும், டிரம்ப் கடைசி வரை தனது தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. தேர்தலில் மிகப் பெரிய மோசடி நடைபெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். தேர்தல் முடிவுகளை மாற்ற நீதிமன்ற கதவுகளையும் தட்டினார். ஆனால் முடிவுகளை மாற்ற இயலவில்லை. அவரது வன்முறை பேச்சு காரணமாக, கடந்த ஜனவரி 6ஆம் தேதி ஜோ பைடனை அதிபராக அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வில் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் வன்முறை ஏற்பட்டது. அமெரிக்க ஜனநாயக வரலாற்றில் இது ஒரு கருப்பு நாளாகவே பார்க்கப்படுகிறது.

5 மாதங்கள் மாயம்

5 மாதங்கள் மாயம்

இதையடுத்து டிரம்ப் மீது பதவி நீக்க தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், குடியரசு கட்சியினரின் ஆதரவு டிரம்பிற்கு இருந்ததால், அந்த தீர்மானம் வெற்றி பெறவில்லை. இருப்பினும், கடந்த ஜனவரி 20ஆம் தேதி வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய டிரம்ப், அதன் பிறகு எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமலேயே இருந்தார்.

வெல்வது நாம்தான்

வெல்வது நாம்தான்

இந்நிலையில், சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு வடக்கு கரோலினா மாகாணத்தில் நடைபெற்ற குடியரசு கட்சியின் மாநாட்டில் டிரம்ப் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "நாம் வடக்கு கரோலினாவில் ஜெயிக்க போவது உறுதி. அடுத்து நடைபெறும் தேர்தலில் வட கரோலினா மாகாணத்தில் மீண்டும் குடியரசு கட்சி கைப்பற்றுவது உறுதி. 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்காக நான் ஆவலாக உள்ளேன்"என்று டிரம்ப் கூறினார்.

சீனா காரணம்

சீனா காரணம்

மேலும், கொரோனா பரவலுக்குச் சீனா தான் காரணம் என்றும் சீனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளுக்கும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "அமெரிக்கா சீன பொருட்களுக்கு உடனடியாக 100% வரை வரியை அதிகரிக்க வேண்டும். கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளை ஈடு செய்யும் வகையில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து சீனாவிடம் இருந்து 10 டிரில்லியன் டாலரை நஷ்டஈடாகப் பெற வேண்டும்.

10 டிரில்லியன் டாலர்

10 டிரில்லியன் டாலர்

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு உலக நாடுகளில் பொருளாதாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாகச் சீனாவுக்கு எந்த நாடும் கடன்பட்டிருக்கவில்லை என நாம் அதிகரிக்க வேண்டும். சீனா தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு 10 டிரில்லியன் டாலரை நஷ்டஈடு தர வேண்டும். சீனாவால் பல்வேறு நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜைடன் - சீனா தொடர்பு

ஜைடன் - சீனா தொடர்பு

சீனாவுக்கு எதிராக அதிபர் ஜோ பைடன் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க மாட்டார். ஏனென்றால், அவரும் அவரது குடும்பத்தினரும் சீனாவிடம் இருந்து கோடிக்கணக்கான டாலரைப் பெற்றுவிட்டனர். அமெரிக்க மக்களிடம் அவர் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். மிகப் பெரிய டெக் நிறுவனங்களும் போலி செய்தி நிறுவனங்களும் இது குறித்துப் பேச விரும்புவதில்லை" எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+