Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதானி லஞ்ச விவகாரம்.. வெள்ளை மாளிகை மிக முக்கிய கருத்து.. இந்தியா அமெரிக்கா உறவு என்னவாகும்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அதானி லஞ்ச புகார் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே அமெரிக்காவின் வெள்ளை மாளிகை இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் Solar Energy Corporation of India என்ற பொதுத்துறை நிறுவனத்துடன் அதானி நிறுவனம் முக்கிய ஒப்பந்தங்களைப் போட்டுள்ளன. இந்த திட்டங்களுக்கு அதானி குழுமம் அமெரிக்காவில் இருந்து ரூ 20,000 கோடிக்கு முதலீடுகளைப் பெற்றுள்ளன.

adani gautam adani usa

அதானி: அதேநேரம் இந்த எஸ்இசிஐ நிறுவனத்துடன் மாநில அரசுகள் ஒப்பந்தங்கள் செய்தால் மட்டுமே தங்கள் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படாது என்பதற்காக பல்வேறு மாநிலங்களின் மின்சார வாரிய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே அமெரிக்காவின் வெள்ளை மாளிகை இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. அதாவது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வலுவாக உறவுகள் நிலையில், அதானிக்கு எதிரான லஞ்சம் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் குறித்த நடவடிக்கையில் அது பெரியளவில் உதவும் என்று வெள்ளை மாளிகை நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதானி குழுமத்தின் தலைவரான அதானிக்கு குற்றச்சாட்டுகள் குறித்து பைடன் நிர்வாகத்திற்குத் தெரியும் என்றும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் தெரிவித்தார்.

குற்றச்சாட்டு: மின்துறை தொடர்பாக பல்வேறு மாநிலங்களின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட சிலர் மீது ஊழல் புகாரை அமெரிக்க அதிகாரிகள் நேற்று குற்றஞ்சாட்டியிருந்தனர். அது தொடர்பான கேள்விக்கே வெள்ளை மாளிகை தரப்பில் இந்த பதில் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக கரீன் ஜீன்-பியர் மேலும் கூறுகையில், "இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து எங்களுக்குத் தெரியும்.. அதேநேரம் அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்துக் கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் மற்றும் நீதித் துறையைத் தொடர்பு கொள்ளுங்கள்" என்றார்.

இந்தியா அமெரிக்கா உறவு: இந்த விவகாரத்தால் இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு அவர், "இந்தியா அமெரிக்கா இடையே வலுவான உறவு இருக்கிறது. இரு நாட்டு மக்களின் நலன் சார்ந்த இந்த உறவு சுமுகமாகவே இருப்பதாக நம்புகிறோம். எனவே, சிக்கல்களைத் தாண்டி இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு தொடரும்" என்று அவர் தெரிவித்தார்.

பின்னணி என்ன: கடந்த 2020ம் ஆண்டு மத்திய அரசின் SECI நிறுவனத்துடன் அதானி குழுமம் சூரிய ஒளி மின்சார உற்பத்தி குறித்த ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டு இருந்தது. இது 12 ஜிகாவாட் சூரிய சக்தியை வழங்கும் ஒப்பந்தமாகும். இருப்பினும், அப்போது மாநில அரசுகள் அதை வாங்க முன்வரவில்லை என்பதால் அந்த ஒப்பந்தம் ரத்தாகும் சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாகவே மாநில மின்துறை அதிகாரிகளுக்கு அதானி தரப்பில் லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. சுமார் ரூ. 2000 கோடி வரை லஞ்சம் தரப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+