ஐநா அமைதி படை வீரர்கள் மீது தாக்குதல்! இஸ்ரேலுக்கு எதிராக திரும்பும் உலக நாடுகள்? நிலைமை ரொம்ப மோசம்
வாஷிங்டன்: லெபனானில் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அதில் ஐநா அமைதிப் படை வீரர்கள் இருவர் காயமடைந்தனர். இது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உலகின் பல்வேறு நாடுகளும் இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது பதற்றத்தை மேலும் மேலும் அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கில் இப்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. காசாவை தொடர்ந்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படையினர் மீது இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்கிடையே சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐநா அமைதிப் படை வீரர்கள் இருவர் காயமடைந்தனர். ஐநா அமைதிப் படை வீரர்கள் மீது நடந்த இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
என்ன நடந்தது: யு.என்.ஐ.எஃப்.ஐ.எல் படை வீரர்கள் லெபனானில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தான் இதில் காயமடைந்துள்ளனர். இருவரும் இந்தோஷனியாவை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைதிப் படை வீரர் மீதான தாக்குதல் என்பது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதற்குச் சமம் என்று யு.என்.ஐ.எஃப்.ஐ.எல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஐநா பாதுகாப்பு அமைப்பில் 50 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் வீரர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹிஸ்புல்லா படையினர் மீது தாக்குதல் நடத்திய போது எதிர்பாராத விதமாக ஐநா அமைதிப் படை வீரர்கள் காயமடைந்ததாக இஸ்ரேல் தரப்பு கூறுகிறது. ஆனால், இதை மறுக்கும் அமைதிப் படை இஸ்ரேல் தங்கள் மீது வேண்டும் என்றே தாக்குதல் நடத்தியுள்ளதாக ஷாக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளது. அமைதிப் படை வீரர்கள் மீது இஸ்ரேல் வேண்டும் என்றே தாக்குதல் நடத்தி இருந்தால் அது மிக மோசமான விளைவுகளை நிச்சயம் ஏற்படுத்தும். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தோனேசியா: தங்களை நாட்டை சேர்ந்த இருவர் தீவிர சிகிச்சையில் இருப்பதை உறுதி செய்த இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சுடி, இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் தாக்குதலை இந்தோனேசியா கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த அவர், ஐ.நா. பாதுகாப்புப் படை மீதான தாக்குதல் என்பது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என்றும் சாடினார். பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை இந்தோனேஷியா கொண்டு இருக்கும் நிலையில், லெபனானில் சுமார் 1200 இந்தோனேசிய வீரர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா: இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது கவலையளிப்பதாகத் தெரிவித்த அமெரிக்கா, "இஸ்ரேல் மக்களை அச்சுறுத்தும் ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதேநேரம் இந்த தாக்குதல்களில் ஐ.நா. அமைதிப் படைக்கு அச்சுறுத்தலாக இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
இத்தாலி: இந்த தாக்குதலை ஏற்கவே முடியாது என்று சொல்லிய இத்தாலி பாதுகாப்பு அமைச்சர் கைடோ குரோசெட்டோ, "இது விபத்து இல்லை.. ஒரு போர் குற்றம்.. சர்வதேச சட்டத்தை மீறியுள்ளனர். இஸ்ரேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து விளக்கமளிக்க இஸ்ரேல் தூதருக்கும் நாங்கள் சம்மன் அனுப்பியுள்ளோம்" என்றார்.
காசா, வெஸ்ட் பேங்க் எனப்படும் மேற்கு கரை மற்றும் லெபனான் மக்கள் மீதான படுகொலைகளைத் தொடர்ந்து இப்போது ஐநா படைகள் மீதே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் துருக்கி கடுமையான வார்த்தைகளில் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் போர் குற்றங்களை நிச்சயம் தண்டிக்க வேண்டும் என்றும் சர்வதேச நாடுகள் இதை உறுதி செய்ய வேண்டும் என்றும் துருக்கி கூறியுள்ளது. மேலும், ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஸ்பெயின், அயர்லாந்து, கனடா ஆகிய நாடுகளும் இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க 20,000 கி.மீ தூரத்திலிருந்து உதவும் இந்திய நட்பு நாடு! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்











Click it and Unblock the Notifications