காட்டுத் தீ போல பரவும் கொரோனா.. உலகம் முழுக்க.. வெறும் 100 மணி நேரத்தில் 10 லட்சம் பேருக்கு பாதிப்பு
வாஷிங்டன்: உலகளவில் வெறும் 100 மணி நேரத்தில் 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் முதலில் பரவிய நாடான சீனாவில் கூட 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட 3 மாதங்கள் பிடித்தன. உலகம் முழுக்க இதுவரை 1 கோடியே 40 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. இது உலக சுகாதார அமைப்புக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. பல அறிவுரைகளை சொன்னாலும் அவற்றை பல நாடுகள் கேட்பதில்லை என ஹு வேதனை தெரிவித்தன.
இந்த நிலையில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.4 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது ஜூலை 13 ஆம் தேதி 1.3 கோடியாக இருந்த இந்த பாதிப்பு வெறும் 100 மணி நேரத்தில் 1.4 கோடியாக அதாவது 10 லட்சம் கேஸ்கள் உயர்ந்துள்ளது.

மருத்துவ நிபுணர்கள்
முதல்முறையாக இது போன்ற எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கவலைத் தெரிவிக்கிறார்கள். ஜனவரி மாதம் முதன்முதலில்கொரோனா வைரஸ் பரவிய சீனாவில் கூட 10 லட்சம் பாதிப்புகளை அடைய 3 மாதங்கள் எடுத்துக் கொண்டது.

நாடுகள்
ஆனால் சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு பரவிய இந்த வைரஸ் உலகளவில் வெறும் 100 மணி நேரத்தில் 10 லட்சமாக உயர்ந்தது கவலைக்குரிய விஷயமாகும். சமூக பரவலாக இந்த தொற்று மாறிவிட்டதா என்பதை அந்தந்த நாடுகள் கண்டறிய வேண்டியது அவசியமான ஒன்று என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

கொரோனா
அமெரிக்காவில் கொரோனாவின் முதல் அலையிலேயே 36 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை அன்று ஒரே நாளில் 77 ஆயிரத்திற்கு மேலான புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளன. ஸ்வீடனில் கொரோனாவின் மொத்த பாதிப்பே 77,281 ஆகும்.
Recommended Video

கொரோனா வைரஸ்
ஜனவரி மாதம் 10-ஆம் தேதி சீனாவில் கொரோனா பரவியதை தொடர்ந்து ஐரோப்பா, அமெரிக்காவில் உயர்ந்தது. ஆனால் தற்போது உலக கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் பாதிக்கு பாதி எண்ணிக்கையை அமெரிக்கா பெற்றுள்ளது. இதன் மூலம் இங்கு நோய் வேகமாக பரவுகிறது என்பதையே காட்டுகிறது.
-
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications