For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலை இருக்கு.. பூ இருக்கு.. கனி இருக்கு.. முரசும் ஒலிக்கும்.. பாட்டாவே பாடிட்டாரே செல்லூரார்!

Google Oneindia Tamil News

Recommended Video

    பாமக, பாஜக, தேமுதிக கூட்டணி பற்றி அமைச்சர் செல்லூர் ராஜு-வீடியோ

    மதுரை: நாங்கள் அமைத்துள்ள கூட்டணி வெற்றிக் கூட்டணியாக முரசொலிக்கும். தற்போதுள்ள இலை, பூ, கனி இணைந்துள்ள கூட்டணியுடன் இனிவரும் கட்சிகளையும் இணைத்து வெற்றி முரசை கொட்ட உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

    கன்னியாகுமரியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் காணொளி காட்சி மூலம் தேஜாஸ் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை துவக்கி வைத்த பிரதமர் மோடி, 208 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 17.2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ராமேஸ்வரம் முதல் தனுஸ்கோடி வரையிலான புதிய ரயில் பாதை திட்டம், 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாம்பன் ரயில் பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

    இதுதொடர்பாக மதுரை ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:

    Also Read | அதிமுகவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உட்பட 3 மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு.. பின்னணி என்ன?

    தேஜாஸ் மதுரை

    தேஜாஸ் மதுரை

    பாரத பிரதமரால் இன்று துவங்கப்பட்டுள்ள தேஜாஸ் ரயில் சேவை மதுரை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். தேஜாஸ் ரயில் சேவையை துவக்கி வைத்த பிரதமருக்கும் மத்திய அரசிற்கும் மதுரை மற்றும் தமிழக மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தேர்லில் வெல்வோம்

    தேர்லில் வெல்வோம்

    கடந்த மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளில் 37 தொகுதிகள் வெற்றி பெற்றதால்தான் மத்திய அரசின் அதிக திட்டங்களை தமிழகத்திற்கு பெற முடிகிறது. மிகப் பெரிய திட்டங்களை மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கி வருகிறது. காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி ஆட்சியில் இது போன்ற தமிழக மக்கள் பயன்பெறும் பெரிய திட்டங்கள் கொண்டு வரப்படவில்லை.

    40லிலும் வெல்வோம்

    40லிலும் வெல்வோம்

    தற்போது அமைந்துள்ள கூட்டணியின் மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று எதிர்காலத்தில் தமிழகத்திற்கு தேவையான இன்னும் அதிக திட்டங்களை மத்திய அரசிடம் இனக்கமாக குரல் கொடுத்து நிறைவேற்றுவோம்.

    மெகா கூட்டணி அமையும்

    மெகா கூட்டணி அமையும்

    கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து முதல்வர், துணை முதல்வர் அமைத்துள்ள குழு மூலம் உரிய நேரத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் மெகா கூட்டணி அமையும் அ.தி.மு.க தலைமையில் அமைந்துள்ள கூட்டணி இயற்கையான கூட்டணி, தமிழக மக்கள் எதிர்பார்த்த, தமிழக மக்களின் உரிமையை மீட்டெடுக்கும் கூட்டணியாக அ.தி.மு.க கூட்டணி இயற்கையாக அமைந்துள்ளது.

    முரசும் ஒலிக்கும்

    முரசும் ஒலிக்கும்

    தமிழக மக்களுக்கு பயனளிக்கும் கூட்டணியாக அமைந்திருப்பது நாட்டு மக்களால் பாராட்டைப் பெற்று வருகிறது. தாங்கள் அமைத்துள்ள கூட்டணி வெற்றிக் கூட்டணியாக முரசொலிக்கும். தற்போதுள்ள இலை, பூ, கனி இணைந்துள்ள கூட்டணியுடன் இனிவரும் கட்சிகளையும் இணைத்து வெற்றி முரசை கொட்ட உள்ளதாகவும் தெரிவித்தார் செல்லூர் ராஜு.

    English summary
    Minister Sellur Raju has expressed his hope to win the LS elections in Tamil Nadu and Puducherry.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X