Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமலாக்க துறை விசாரணையில் திரிணாமுல் அமைச்சர்! நீதிமன்றம் பரபர உத்தரவு.. மம்தாவுக்கு பெரும் தலைவலி

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஊழல் புகாரில் கைதாகி உள்ள திரிணாமுல் அமைச்சர் மற்றும் அவரது நண்பர் தொடர்பாக நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து உள்ளது.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசில் தொழில்துறை அமைச்சராக இருப்பவர் பார்த்தா சாட்டர்ஜி. இவர் அம்மாநில கல்வித் துறை அமைச்சராக இருந்த சமயத்தில் ஊழல் செய்ததாகப் புகார்கள் எழுந்தன.

ஆசிரியர் தேர்வு ஆணைய ஆட்சேர்ப்பில் இவர் ஊழல் செய்ததாகப் புகார் எழுந்த நிலையில், அமலாக்கத் துறையினர் சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கில் சோதனை நடத்தினர்.

திரிணாமுல் அமைச்சர்

திரிணாமுல் அமைச்சர்

அதில் திரிணாமுல் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய நண்பரான அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அங்கிருந்து சுமார் 20 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது.கைப்பற்றப் பணத்தை எண்ணி முடிக்கவே அவர்களுக்கு சில மணி நேரம் வரை ஆனது. இதற்கிடையே உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி, பார்த்தா சாட்டர்ஜி கொல்கத்தா மருத்துவமனையில் அட்மிட் ஆனார்.

எய்ம்ஸ்

எய்ம்ஸ்

இது தொடர்பாகக் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையினர் வழக்கு தொடர்ந்து இருந்தனர். அதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் அமலாக்கத் துறை விசாரணையில் இருந்து தப்பிக்க, அந்தக் குறிப்பிட்ட மருத்துவமனையில் அட்மிட் ஆவதாக வாதிட்டனர். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட கொல்கத்தா நீதிமன்றம் அமைச்சர் புபனேஷ்வர் எய்ம்ஸுக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டது.

மருத்துவமனை தேவையில்லை

மருத்துவமனை தேவையில்லை

அதன்படி பார்த்தா சாட்டர்ஜி ஹெலிகாப்டர் மூலம் புபனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். திரிணாமுல் அமைச்சருக்கு சில உடல்நலப் பிரச்சினைகள் உள்ளது தான் என்றாலும் கூட, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கை சமர்ப்பித்தனர்.

Recommended Video

    Rahul Gandhi-யிடம் ED விசாரணை! Cong Volunteers Arrested! | National Herald Case | *Politics
    நீதிமன்றம் உத்தரவு

    நீதிமன்றம் உத்தரவு

    இந்த அறிக்கை நீதிமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டது. இதனிடையே வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது கூட்டாளியாகக் கருதப்படும் அர்பிதா முகர்ஜி ஆகியோரை வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைக்க உத்தரவிட்டனர். பார்த்தா சாட்டர்ஜி நாளை அல்லது நாளை மறுநாள் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+