அனுமதி மறுக்கப்பட்ட அகதிகள் நாடு திரும்ப கனடா அரசு நிதியுதவி
ஒட்டாவா: கனடாவில் தங்க அனுமதி மறுக்கப்பட்ட அகதிகள் தங்கள் நாட்டுற்கு செல்ல விமான டிக்கெட்டும், 2,000 டாலர் நிதியுதவியும் வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கனடாவில் அனுமதியின்றி தங்கியிருக்கும் அகதிகள் தங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்ல அவர்களுக்கு விமான டிக்கெட்டும், 2,000 டாலர் நிதியுதவியும் அளிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இந்த 2,000 டாலர் அகதிகள் தங்கள் நாட்டில் வியாபாரம் செய்ய, படிக்க, மறுவாழ்வு அமைத்துக் கொள்ள உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டது.
ஆனால் கனடாவின் எல்லை சேவை பிரிவின் (CBSA) இணையதளத்தில் இந்த திட்டத்தை அகதிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் திட்டம் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது. மேலும் அகதிகள் தங்கள் நாடுகளுக்கு திரும்பிச் செல்ல குறைந்தது 15,000 டாலராவது தேவைப்படும் என்றும், அனுமதி மறுக்கப்பட்ட அகதிகள் பலர் கனடாவை விட்டுப் போக விரும்பவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தால் சுமார் 7,000 அகதிகள் மகிழ்ச்சியுடன் நாடு திரும்புவார்கள் என்று கனடா எல்லைப்படை தெரிவித்தது. ஆனால் பெரும்பாலான அகதிகள் கனடாவை விட்டுப் போக விரும்பவில்லை என்பது குறி்ப்பிடத்தக்கது.