ஜெய்ப்பூர் இலக்கிய விழா 2022ஐ ஏன் தவறவிடக்கூடாது? ஆறு முக்கிய காரணங்கள்

Subscribe to Oneindia Tamil

15வது ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் ஹைபரிட் முறையில் மார்ச் 5 முதல் 14 வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்வு ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டல் கிளார்க்ஸ் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடைபெற உள்ளது.

புகழ் பெற்ற 15வது ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் (JLF) இந்த ஆண்டு ஹைபரிட் முறையில் நடைபெற உள்ளது. இந்த இலக்கிய விழா மார்ச் 5-14 முதல் ஆன்லைன் வழியாக நடைபெறும் நிலையில், வரும் மார்ச் 10-14 வரை இது நேரடியாக நடைபெறுகிறது. இந்த இலக்கிய விழாவில், பல அனுபவங்களை ஒருவர் பெறலாம். நாட்டின் பிங்க் நகரம் இலக்கிய ஆற்றலுடன், கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடத் தயாராக உள்ளது.

இது மார்ச் 10 முதல் 14 வரையிலும், மார்ச் 5 முதல் 14 வரையிலும் நடைபெறும். திருவிழா நாட்களில், முடிவற்ற அனுபவங்களை உள்வாங்கலாம்: பல நுண்ணறிவுள்ள அமர்வுகள், ஆராய்வதற்கான உணவுக் கடைகள், கேட்பதற்குக் கண்கவர் இசை மற்றும் ஒரு புத்தகக் கடையுடன் கூடிய சலசலப்பான திருவிழா மற்றும் திருவிழாவின் விளிம்புகளில் பல விருந்துகள் நடத்தப்பட்டன. இதனால் இளஞ்சிவப்பு நகரம் அதன் தொற்று இலக்கிய ஆற்றலுடன் ஊடுருவி, கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடத் தயாராக உள்ளது.

 Impressive second tranche of speakers in spectacularly hybrid Jaipur Literature Festival

இந்த நிகழ்வுக்கு ஒன்இந்தியா மீடியா பார்ட்னராகவும், டெய்லி ஹன்ட் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் பார்ட்னராகவும் உள்ளது. பலதரப்பட்ட சிந்தனையாளர்களை ஒரே தளத்திற்கு அழைத்து வந்து சிந்தனை மிக்க விவாதம் மற்றும் உரையாடலில் ஈடுபட இவை உதவ உள்ளன.

இந்த ஜெய்ப்பூர் இலக்கிய விழாவை ஏன் தவறவிடக்கூடாது?

இவ்விழாவில் உலகின் தலைசிறந்த இலக்கியவாதிகள் பலர் பங்கேற்க உள்ளனர். அவர்கள் இந்த விழாவில் பல நிகழ்வுகளில் உரையாட மற்றும் விவாதிக்க உள்ளனர். இதில் 2022 புலிட்சர் விருதின் இறுதிச் சுற்று வரை சென்ற ஜொனாதன் ஃபிரான்ஸன், 2021 புக்கர் பரிசு வென்ற டாமன் கல்குட்; ஆஸ்திரேலியா எழுத்தாளர் மற்றும் 2003 புக்கர் விருது பெற்ற டிபிசி பியர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த விழாவில் பல விருதுகளை வென்ற புகழ்பெற்ற பிரிட்டிஷ் கவிஞர் ரூத் பேடல், சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருது பெற்ற தனுஜ் சோலங்கி; விருது பெற்ற பிரிட்டிஷ்-துருக்கிய நாவலாசிரியர் மற்றும் துருக்கியில் அதிகம் படிக்கப்படும் பெண் எழுத்தாளர் எலிஃப் ஷஃபாக்; அமெரிக்க கல்வியாளர் மாயா ஜசனோஃப்; விருத பெற்ற எழுத்தாளர் ராபர்ட் மக்ஃபர்லேன்; பல புகழ் பெற்ற புத்தகங்களை எழுதிய பத்ம பூஷன் விருது பெற்ற வித்யா டெஹேஜியா. மூத்த பத்திரிகையாளரும், தேசிய விருது பெற்ற திரைப்படத் தயாரிப்பாளருமான வினோத் கப்ரி ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.

 Impressive second tranche of speakers in spectacularly hybrid Jaipur Literature Festival

காலை நிகழ்வுகள்

இந்த இலக்கிய திருவிழா ஒவ்வொரு நாளும் கலக்கலான இசையுடன் தொடரும். அதைத் தொடர்ந்து இலக்கிய விருந்து படைக்கும். இந்த இசை விழாவில் இந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகர் உஜ்வல் நகர் மற்றும் ஸ்ரீமதி சோம்பலா குமார், இந்தியப் பாரம்பரிய பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ஆஸ்தா கோஸ்வாமி; இசைக்கலைஞர் பிரியா கனுங்கோ ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

மாலை நிகழ்வுகள்

காலையில் இசைத் திருவிழா நடைபெறும் நிலையில், மார்ச் 13ஆம் தேதி அமர் கோட்டையின் கணேஷ் போலில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய பாடகர் மற்றும் பழம்பெரும் பண்டிட் குமார் கந்தர்வாவின் மகளான கலாபினி கோம்காலி, முன்னணி நடனக் கலைஞரும் நடன இயக்குநருமான அதிதி மங்கள்தாஸ் ஆகியோரின் நிகழ்ச்சிகள் இடம்பெறும்; மேலும், ஸ்கூல் ஆஃப் டிசைன் மாணவர்களால் ஒரு பேஷன் ஷோ நடத்தப்படும்.

ஜெய்ப்பூர் இசை அரங்கம்

பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஜெய்ப்பூர் இசை விழா 2022 மார்ச் 10 முதல் 12 வரை நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

கடந்த காலங்களில் இந்த ஜெய்ப்பூர் இசை நிகழ்வில் இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து பல முக்கிய கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டும் அதேபோல இந்திய கிளாசிக்கல் குழுமமான அனிருத் வர்மா கலெக்டிவ் போன்ற அனுபவமிக்க இசைக்கலைஞர்களின் நிகழ்சி நடைபெறும். மேலும், 8 இசை கலைஞர்களுடன் 14 ஆண்டு இசைப் பயணத்தை நிறைவு செய்த முன்னணி இந்திய ஃப்யூஷன் இசைக்குழுவான அத்வைதா, பிரபல நாட்டுப்புற பாடகர் மூரலாலா மர்வாடா; ராஜஸ்தானி நாட்டுப்புற இசைக்கலைஞர் குட்லே கான், காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்த பாடகர் அலி சஃபுடின்; கௌரவ் குப்தா, சித் கவுட்டோ மற்றும் ஜோஹன் பைஸ் ஆகியோரின் நிகழ்ச்சிகளும் இடம் பெறுகிறது.

 Impressive second tranche of speakers in spectacularly hybrid Jaipur Literature Festival

புத்திக விழா

தெற்காசியாவின் மிகப்பெரிய வெளியீட்டு மாநாடான ஜெய்ப்பூர் புக்மார்க் (JBM), ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் நடத்தப்படுகிறது. B2B இயங்குதளமான இது வெளியீட்டாளர்கள், இலக்கிய முகவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள முக்கிய தொழில்துறையினர் மற்றும் எழுத்தாளர்களை ஒன்றிணைக்கிறது. இந்த ஆண்டு இது ஹைபிரிட் முறையில் நடைபெறத் தயாராக உள்ளது. இது புத்தக துறையில் இருக்கும் அனைத்து தரப்பினரையும் சந்திக்கும் வாய்ப்பை தருகிறது.

ஃபுட் ஸ்டால்கள் மற்றும் கைவினை பொருட்கள்

இந்ல இலக்கிய திருவிழாவில் கலந்து கொள்ளும் நபர்கள் இந்தியாவின் பரந்த கைவினைஞர்களின் திறமைகளையும் பார்க்கலாம். இது பஸ்ஸர் ஹோட்டல் கிளார்க்ஸில் 5 நாட்களும் காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும்.

ஆடைகள், நகைகள், காலணிகள், வீட்டு அலங்காரம் என அனைத்தையும் உள்ளடக்கி இருக்கும் இது அனைவருக்கும் ஈர்க்கக்கூடியது மேலும், இலக்கிய விழா நடைபெறும் நாட்களில் இரவு நேரங்களில் இயங்கும் ஃபுட் ஸ்டால்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+