12 நாட்களில் 23 லட்சத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 23 லட்சத்துக்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் செய்திக் குறிப்பு:

நாடு தழுவிய மிகப்பெரிய கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்தின் 12-ஆம் நாள் 28 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. கொரோனா தடுப்பு மருந்தை இது வரை பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியுள்ளது.

More than 23 Lakh Healthcare Workers Vaccinated across the Nation

41,599 முகாம்களில் 23,28,779 சுகாதார பணியாளர்களுக்கு இன்று மாலை 6 மணி வரை வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை 6 மணி வரை 5,308 முகாம்கள் நடைபெற்றன. 12-ஆம் நாளான இன்று நாடு முழுவதும் 2,99,299 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தமிழ்நாட்டில் 4,316 பேருக்கு இன்று தடுப்பூசி போடப்பட்டது. இறுதி தகவல்கள் இன்று பின்னிரவு கிடைக்கும்.

கடந்த 24 மணி நேர்த்தில் ஒடிசாவை சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உடற்கூறு ஆய்வறிக்கை இன்னும் வரவில்லை. தடுப்பு மருந்தின் காரணமாக இது வரை எந்தவிதமான தீவிர பாதிப்பு/உபாதைகள்/இறப்பு ஏற்படவில்லை.

இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+