Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1/2 கப் பொட்டுக்கடலை, 1 கப் இட்லி மாவு இருந்தா போதும்.. மாலை நேரத்தில் அசத்தலான ஸ்நாக்ஸ் தயார்!

Subscribe to Oneindia Tamil

Coconut Susiyam Recipe In Tamil: பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சத்தான மற்றும் ருசியான பலகாரம் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் சமையலறையில் அரை கப் பொட்டுக்கடலையும், ஒரு கப் இட்லி மாவும் இருந்தால் போதும், நாவில் கரையும் சுவையில் இந்த தேங்காய் சுசியத்தை நிமிடங்களில் செய்து முடிக்கலாம்.

வழக்கமாகச் செய்யப்படும் சுசியத்தை விட இது மிகவும் எளிமையானது. பசியைத் தூண்டும் மணமும், இனிப்புச் சுவையும் கொண்ட இந்த ஸ்நாக்ஸை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.

Coconut Susiyam

இந்த தேங்காய் சுசியத்தை எப்படிச் செய்வது? இதோ உங்களுக்காக எளிமையான செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனைப் படித்துப் பார்த்து உங்கள் இல்லங்களிலும் முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

பூரணத்திற்கு:

* பொட்டுக்கடலை - 1/2 கப்

* நெய் - 1/2 டீஸ்பூன்

* துருவிய தேங்காய் - 1/2 மூடி

* வெல்லம் - 1 1/2 கப்

* தண்ணீர் - 1/4 கப்

மேல் மாவிற்கு:

* இட்லி மாவு - 1 கப்

* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

* எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு

செய்முறை விளக்கம்:

* முதலில் மிக்சர் ஜாரில் அரை கப் பொட்டுக்கடலையைச் சேர்த்து, நன்கு நைசாகப் பொடி செய்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தைச் சேர்த்து, அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். வெல்லம் முழுமையாகக் கரைந்ததும், அதனை ஒரு வடிகட்டியால் வடிகட்டித் தனியாக வைத்துக் கொள்ளவும்.

* இப்போது வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரை டீஸ்பூன் நெய் ஊற்றவும். நெய் உருகியதும், துருவிய தேங்காயைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.

* தேங்காய் வறுபட்டதும், நாம் அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலைப் பொடியைச் சேர்த்து, மணம் வரும் வரை கிளறவும்.

* அடுத்து, இதில் தயார் செய்து வைத்துள்ள வெல்லக் கரைசலை மெதுவாகச் சேர்த்து நன்கு கிளறவும். கலவை ஒன்றுசேர்ந்து திரண்டு வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டுப் பூரணத்தைக் குளிர விடவும்.

* ஆறிய பூரணத்தை உங்களுக்குப் பிடித்த அளவில் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து ஒரு தட்டில் வரிசையாக வைத்துக்கொள்ளவும்.

* மேல் மாவு தயார் செய்ய, ஒரு கிண்ணத்தில் இட்லி மாவை எடுத்து, அதனுடன் அரிசி மாவைச் சேர்த்துக் கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ளவும்.

* வாணலியில் பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள பூரண உருண்டைகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போடவும்.

* மிதமான தீயில் வைத்து, எல்லாப் பக்கமும் பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுத்தால், மொறுமொறுப்பான மற்றும் இனிப்பான தேங்காய் சுசியம் தயார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+