Black Bugs in Rice: அரிசியில் வண்டு வைக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
How to prevent rice from black bugs: என்னதான் அரிசி வைக்கும் பாத்திரத்தை நன்றாக கழுவி வெயிலில் காயவைத்து அதில் நியூஸ் பேப்பரை வைத்து அரிசியை கொட்டினாலும் கருப்பு நிற வண்டுகள் வரத்தான் செய்கிறது. இதற்கு தீர்வு என்ன என்பதை பார்க்கலாம்.
தென்னிந்தியர்களுக்கு அரிசிதான் முக்கிய உணவு. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா என எங்கு சென்றாலும் அரிசி பிரதானம். இதில் அரிசியின் ரகம் மாறுபடும். கேரளாவில் சிகப்பு அரிசி அல்லது குண்டு அரிசியை பயன்படுத்துவார்கள்.

சிலருக்கு சாதம் சாப்பிடாவிட்டால் அன்றைய பொழுதே என்னமோ போல் இருக்கும். இதனால் இரவு நேரத்தில் ஒரு பிடி சாதமாவது சாப்பிட வேண்டும் என நினைப்பார்கள். இந்த அரிசியை குறுணையாக்கி சிறு குழந்தைகளுக்கு கஞ்சி கொடுப்போம். அது போல் பல் இல்லாதவர்களுக்கும் இந்த சாதமே சவுகரியமான உணவாகும்.
அப்படிப்பட்ட அரிசியை பெரிய பெரிய டிரம்களில் வாங்கி சேமித்து வைப்போம். ஆனால் என்னதான் சேமித்தாலும் எப்படியாவது வண்டு வைத்துவிடும். இதனால் இந்த அரிசியை ஒவ்வொரு முறையும் புடைத்து புடைத்து பயன்படுத்த வேண்டும்.
அரிசியை வெயிலில் எடுத்து காய வைத்து வைத்து எடுப்பார்கள். சல்லடை வைத்து சலிப்பார்கள். ஆனாலும் மீண்டும் வண்டு வைத்துவிடும். இதை தடுக்க வேப்ப இலைகளை எடுத்து ஒரு வெள்ளைத் துணியில் மூட்டையாக கட்டி அந்த அரிசி பாத்திரத்தில் போட்டு வைத்துவிடவும்.
இல்லாவிட்டால் கிராம்புகளை சிறிதளவு எடுத்து அவற்றையும் அரிசி பாத்திரத்தில் போட்டு வைக்கலாம். உரித்த பூண்டை போட்டு வைத்தாலும் வண்டு வராது. ஆனால் பூண்டில் இருக்கும் ஈரத்தன்மை அரிசியை கெடுத்துவிடாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications