ஜெவின் தீபாவளி வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
தீபாவளியையொட்டி முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
இந்த ஆண்டு மறம் ஒழிந்து அறம் தழைத்துள்ளது. அகத்தும், புறத்தும் உள்ள இருளை நீக்கி பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி தமிழக மக்கள்நிடைபோட தீபாவளிப் பண்டிகை வழி வகுக்கட்டும் என்று கூறியுள்ளார்.
தமிழக ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா விடுத்துள்ள செய்தியில், தீபத் திருநாளாம் தீபாவளி முதல் தமிழக மக்கள் ஒளிமயமான எதிர்காலத்தை பெற இறைவனைவேண்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல பாரதீய ஜனதாக் கட்சியின் தேசியச் செயலாளர் இல.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ். திருநாவுக்கரசர், காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசன், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோரும் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
வழக்கம்போல திமுக தலைவர் கருணாநிதி இந்த முறையும் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications