பூச விழா காணும் பழனி முருகன்

Subscribe to Oneindia Tamil

Palani Andavar அறுபடை வீடுகளில் பழமையானது பழனி. இங்கு மூலவர் கோவணாண்டியாககாட்சியளிக்கும் தண்டாயுதபாணி சுவாமி. இங்கு தைப்பூச திருவிழா மிகவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தைப் பூச திருவிழா புதன்கிழமை(07.02.2001) நடைபெறுகிறது

முருகனுக்குரிய திருவிழாக்களில் தைப் பூச திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும்.தைப்பூசத்தன்று மக்கள் பால்குடம், காவடி, அலகு குத்தி தேர் இழுத்தல் போன்றவற்றில்ஈடுபடுவர்.

அலகு குத்தி தேர் இழுத்தல் என்பது சப்பரம் போன்றவற்றை கம்பியில் இணைத்து அந்தகம்பியை முதுகில் குத்திக்கொண்டு அதை கோவிலுக்கு இழுத்து வருவதுதாகும்.

தைப்பூசத் திருவிழா தை மாதம் பூச நட்சத்திர தினத்தன்று நடை பெறும். இந்த திருநாள்10 நாட்கள் நடைபெறும். 10 நாட்களும் கலை நிகழ்ச்சிகள் பழனியின் அடிவாரத்தில்நடைபெறும்.

Palani Templeபக்தர்கள் சுமந்து வரும் பால்குடத்திலிருக்கும் பால் மூலம் தண்டாயுதபாணி சுவாமிக்குஅபிஷேகம் நடைபெறும்.

10 நாட்களும் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தமிழகத்தின் பலபகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பழனிக்கு கால் நடையாக நடந்து வருவது வழக்கம்.

தைப்பூச விழா தொடங்கிய முதல் நாளிலிருந்தே பக்தர்கள் பெருந்திரளாக வரத்தொடங்கி விட்டார்கள். தைப் பூச தினமான புதன்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழனி மட்டுமல்லாது, திருத்தணி, திருப்பரங்குன்றம், பழமுதிர்ச் சோலை என முருகன்கோவில்கள் அனைத்திலுமே தைப்பூச விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழகம் மட்டுமல்லாது, சிங்கப்பூர், மலேசியா உள்பட தமிழர் வாழும் தலங்கள்அனைத்திலும் தைப்பூச விழா சிறப்புர கொண்டாடப்படுவது வழக்கம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+