திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்
திருச்செந்தூர்:
சூரபதுமனை முருகப் பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று திருச்செந்தூர் அருள்மிகுசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி விழா இந்த ஆண்டும் கடந்த 5ம் தேதி இந்தக் கோவிலில் தொடங்கியது.தினமும் காலையிலும் இரவிலும் யாகசால பூஜைகள் நடந்து வருகின்றன.
சஷ்டி விழாவின் 6வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையும் யாகசாலை பூஜை வழக்கம் போல்நடைபெறும். பகலில் உச்சிக் கால தீபாராதனையும், யாகசாலை தீபாராதனையும் நடைபெறும்.
பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருள்வார். வீரவாள் வகுப்பு, வேல் வகுப்பு பாடல்களைப்பாடிக் கொண்டே மேளதாள வாத்தியங்களுடன் சுவாமியை பக்தர்கள் சண்முகவிலாசம் கொண்டு சேர்ப்பார்கள்.
அங்கு மீண்டும் பிரம்மாண்ட தீபாராதனை முடிந்த பின்னர் மாலை 3.45 மணிக்கு சூரபதுமனை வதம் செய்வதற்காகதிருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திலிருந்து சுவாமி புறப்பட்டு கடற்கரையில் எழுந்தருள்வார்.
பல்வேறு தோற்றங்களுடன் போரிட வரும் சூரபதுமனை இறுதியில முருகப் பெருமான் சம்ஹாரம் செய்வார்.அப்போது திருச்செந்தூர் கடற்கரையில் கடல் அலையையும் மிஞ்சும் வகையில் கூடி நிற்கும் லட்சக்கணக்கானமக்கள் "அரோகரா... அரோகரா..." என்று குரல் எழுப்புவார்கள்.
சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் சந்தோஷ மண்டபத்தை வந்தடையும் சுவாமிக்கு அலங்கார தீபாராதனைகள்நடைபெறும். இதையடுத்து கிரிப்பிரகார உலா வரும் சுவாமி மீண்டும் திருக்கோயிலை வந்தடைவார். அங்குஅவருக்கு சாயாபிஷேகமும் சஷ்டி தகடு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
இதைத் தொடர்ந்து அதற்கு மறுநாள் இரவு சுப்பிரமணிய சுவாமி - தெய்வானையின் திருக்கல்யாணம்நடைபெறும். அதற்கும் அடுத்த நாள் இரவு தம்பதி சமேதராக தங்கமயில் சப்பரத்தில் ஊர்வலம் வந்துபக்தர்களுக்குக் காட்சியளிப்பார் சுவாமி.
சுவாமியின் சூரசம்ஹார நிகழ்ச்சியைத் தரிசிப்பதற்காக தமிழகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள்ஏற்கனவே திருச்செந்தூரில் குவிந்து விட்டனர். மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட முக்கியநகரங்களிலிருந்து அங்கு சிறப்பு பஸ்களும் விடப்பட்டுள்ளன.
இதையடுத்து அங்கு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications