திருப்பதியில் இன்று முதல் 8ஆம் தேதி வரை! முன்பதிவு டோக்கன் இல்லாமல் சொர்க்கவாசல் தரிசனம் செய்யலாம்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் வரும் 8ஆம் தேதி வரை முன்பதிவு இல்லாமல் இலவசமாக சொர்க்கவாசல் பிரவேசம் செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அனைத்து வைணவ கோயில்களிலும் மார்கழி மாதத்தில் வளர்பிறை ஏகாதசியன்று வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். இந்த சொர்க்கவாசல் வழியாக நாமும் பிரவேசம் செய்தால் அடுத்த ஜென்மம் ஒன்றே நமக்கு கிடையாது என்பது ஐதீகம்!

அந்த வகையில் கடந்த ஆண்டு சொர்க்கவாசல் டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டது. திருப்பதி, ஸ்ரீரங்கம், சென்னை மற்றும் 108 வைணவ தலங்களிலும் இந்த சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.
திருப்பதி உள்ளிட்ட கோயில்களில் இந்த சொர்க்கவாசல் 10 நாட்களுக்கு திறந்திருக்கும். அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் 30, 31, ஜனவரி 1 ஆம் தேதிகளில் இலவசமாக சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய முன்பதிவு டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டன.
அதன்படி கடந்த 3 நாட்களில் 1.80 லட்சம் பக்தர்களுக்கு நவம்பர் 29ஆம் தேதி டிக்கெட் வழங்கப்பட்டது. இன்றைய தினமான 2 ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 1500 டிக்கெட்கள் வீதம் ரூ 300 சிறப்பு தரிசன டோக்கன்களும் ஏற்கெனவே டிசம்பர் 5ஆம் தேதி வழங்கப்பட்டன.
இந்த 3 நாட்களில் ரூ 300 தரிசனம் உள்ளிட்ட எந்த சேவைகளும் இல்லை. ப்ரோட்டோகால் விஐபி இல்லாதவர்களுக்கான தரிசனமும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று முதல் 8ஆம் தேதி வரை சொர்க்கவாசல் வழியாக ஏழுமலையானை தரிசனம் செய்ய முன்பதிவு டிக்கெட் இல்லாத பக்தர்களளுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அது போல் ரூ 300 தரிசன டிக்கெட் பெற்றவர்களும் தரிசனம் செய்கிறார்கள். இலவச தரிசனத்தில் ஏழுமலையானை சொர்க்கவாசல் வழியாக தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் வருகை தந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications