Tirumala: திருப்பதியில் அங்கப்பிரதட்சண டிக்கெட்டுகள்! 10 மணிக்கு ரிலீஸான 10 நிமிடத்தில் மொத்தம் காலி! ஆல் ரெட்
திருப்பதி: திருமலை திருப்பதியில் அங்கபிரதட்சிணம் செய்ய வேண்டுதலா? அப்படியென்றால் வரும் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான முன்பதிவு டோக்கன்கள் இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தானம் வெளியிட்ட அடுத்த 10 ஆவது நிமிடங்கள் மொத்தம் தீர்ந்துவிட்டன.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இவர்கள் சிறப்பு தரிசனம், ஆர்ஜித சேவைகள், திவ்ய தரிசனம், இலவச தரிசனம் ஆகிய முறைகளில் ஏழுமலையானை மனதார தரிசிக்கிறார்கள்.
ஜனவரி மாதம் வரை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன. தற்போது பிப்ரவரி மாதத்திற்கான ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நாளை வெளியிடப்படுகிறது.
இந்த நிலையில் பிப்ரவரி மாதம் இலவச அங்கப்பிரதட்சிணம் செய்வதற்கான டோக்கன்கள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்தது. அதன்படி காலை ஹைஸ்பீட் இன்டர்நெட்டுடன் அங்கப்பிரதட்சிணம் செய்ய போகும் நபர்களின் பெயர், வயது, பாலினம், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டையின் எண்ணுடன் பக்தர்கள் தயாராக இருந்தனர்.
இந்த நிலையில் டிக்கெட் விற்பனை தொடங்கிய அடுத்த 10ஆவது நிமிடம் மொத்தம் விற்றுத் தீர்ந்துவிட்டது. வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்கள் அனைத்திலும் சிகப்பு கலர் இருக்கிறது. இன்று இந்த டிக்கெட் பெற முடியாதவர்கள் அடுத்த மாதம் வரை காத்திருங்கள். மார்ச் மாதத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.
பொதுவாக திருமலை திருப்பதியில் அங்கப்பிரதட்சிணம் செய்ய பக்தர்கள் நேரிடையாக டிக்கெட் வாங்கினர். இதற்கு 2 அல்லது 3 மணி நேரம் வரை காத்திருக்கும் சூழல் எழுந்தது. இதனால் இணையதளம் மூலம் கடந்த 3 ஆண்டுகளாக டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அனைத்து நாட்களிலும் தலா 1500 டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும். வெள்ளிக்கிழமைகள் தவிர்த்து அனைத்து தினங்களும் வழங்கப்படும். அதாவது பெண்களுக்கு 750 , ஆண்களுக்கு 750 டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுகிறது.
அங்கபிரதட்சிணம் என்பது ஒரு வகையான நேர்த்தி கடன். இதை உடலும் மனதும் ஒரு சேர வைத்து செய்தால் மட்டுமே செய்ய முடியும். 3 கி.மீ. தூரத்திற்கு கோயிலை சுற்றி வரும் நிகழ்வு இது. கர்ப்பிணிகள் அங்கப்பிரதட்சிணம் செய்யக் கூடாது. அங்கப்பிரதட்சிணம் செய்பவர்கள் அந்த சலுகையை பயன்படுத்தி சுவாமி தரிசனம் செய்ய முடியாது. அதற்கு அவர்கள் ரூ 300 தரிசன டிக்கெட்டோ அல்லது இலவச தரிசனத்திலோ தரிசனம் செய்ய வேண்டும்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications